மேலும் அறிய

பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 மடங்கு பணம்.. ஆசை காட்டிய மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

பழைய 2000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 1 லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புதிய நோட்டுகள் வழங்கப்படும்.

பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக புதிதாக இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூபாய் 3 கோடியே 40 லட்சம் கள்ள நோட்டுகள் , ரூபாய் 15 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப் பணம், சொகுசு கார்கள் செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 மடங்கு பணம்.. ஆசை காட்டிய மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வம் என்பவர் கடந்த 26.06.2024 அன்று தேனியைச் சேர்ந்த சில நபர்கள் 500 ரூபாய் தாள், ஒரு லட்சம் கொடுத்தால், ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் மதிப்பிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் தருவதாக சென்னையில் இருந்து தன்னை வரவழைத்து ரூ.10,75,000 பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து கடந்த 27.06.2024 அன்று மனு ரசீது 628/24 போடப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 மடங்கு பணம்.. ஆசை காட்டிய மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த நபர்கள் தன்னை தொடர்பு கொண்டு பழைய 2000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 1 லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புதிய நோட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்ததாக தேனி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதன் பேரில் தேனி  போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக உள்ள ஒரு வீட்டிலிருந்து சொகுசுக் காரில் கட்டுக் கட்டாக பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் நேற்று இரவு தேனி சிவாஜி நகர் பகுதியில் சென்ற ஸ்கார்பியோ சொகுசு காரை  போலீசார் மடக்கி சோதனை செய்த போது, அந்தக் காரில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.


பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 மடங்கு பணம்.. ஆசை காட்டிய மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

காரை ஓட்டி வந்த கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரது மகன் சேகர்பாபு (45)என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்,பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பரமராஜ் என்பவரது மகன் கேசவன் (36) க்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்து அவரையும் கைது செய்தனர்.இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி வாடிக்கையாளர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, செல்போன்களை பறித்துக்கொண்டு அவர்களை மிரட்டி ஏதாவது ஒரு தனி இடத்தில் இறக்கிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

இருவரிடமிருந்தும் ரூபாய் மூன்று கோடியே 40 லட்சம் மதிப்பிற்கு 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் (கலர் ஜெராக்ஸ் என்று கூறப்படுகிறது) மற்றும் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப் பணம்,16 செல்போன்கள், ஸ்கார்பியோ கார் உள்ளிட்ட மூன்று சொகுசு கார்களை  போலீசார் பறிமுதல் செய்தனர்.


பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 மடங்கு பணம்.. ஆசை காட்டிய மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

இதுகுறித்து இன்று தேனி நகர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், கள்ள நோட்டுகள் மற்றும் சொகுசு கார்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை  செய்தியாளர்களிடம் கூறினார்.

பிடிபட்ட 16 செல்போன்களில் ஒன்று ஆவடியை சேர்ந்த தவச்செல்வம் என்பவருடைய செல்போன் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவரிடமிருந்து ரூபாய் 10,75,000 பறித்துக்கொண்டு மோசடி செய்த கும்பலும் இவர்கள்தான் என தெரிய வந்தது. இது தவிர மேலும் 15 செல்போன்களுக்கு உரிய உரிமையாளர்கள் யார்? அவர்கள் இந்த கும்பலிடம் எத்தனை கோடி பறிகொடுத்துள்ளார்கள்? என போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget