மேலும் அறிய

Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

தேனி அருகே மனைவியின் முன்னாள் கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் என்பவர் (வயது35). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீனா தனது திருமணத்துக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த விக்ரம் என்ற சிவா (27) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. விக்ரம், கட்டுமான கூலித்தொழிலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

மனைவியிடம் தகராறு:

திருமணத்துக்கு பிறகு, தனது மனைவியின் காதல் விவகாரம் ஜெகதீஸ்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மீனாவிடம், ஜெகதீஸ்குமார் அடிக்கடி தகராறு செய்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம் வீட்டுக்கு மீனா சென்றுள்ளார். தனது கணவருடன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவர் விக்ரமிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை விக்ரம் குடும்பத்தினர் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே தனது மனைவி அவரது முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்றது ஜெகதீஸ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் விக்ரமை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து ஜெகதீஸ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு விக்ரம் வீட்டுக்கு சென்றுள்ளார். திறந்து கிடந்த பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சென்று  அங்கு தூங்கிக்கொண்டிருந்த விக்ரமை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, விக்ரமின் மார்பு பகுதியில் சரமாரியாக ஜெகதீஸ்குமார் குத்தினார்.


Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

குத்திக்கொலை:

விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரர் கவுதம் எழுந்தபோது அவரையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜெகதீஸ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த விக்ரம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுதம் கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தப்பி ஓடிய ஜெகதீஸ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விக்ரமின் உறவினர்கள், மாரியம்மன் கோவில்பட்டியில், போடி, தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்த ஜெகதீஸ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget