மேலும் அறிய

Theni: விளையாட சென்ற சிறுவர்கள்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு... தேனியில் பெரும் சோகம்..!

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

தேனி சமதர்மபுரம் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சிவராஜ். அவருடைய மகன் சிவசாந்தன் (12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு  விடுமுறையில் இருந்துள்ளார். தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து இருவரும் 8-ம் வகுப்பு செல்ல இருந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

Crime: மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பல்; புகார் கொடுத்த பெண் கொடூர கொலை.. கேரளாவில் பயங்கரம்


Theni: விளையாட சென்ற சிறுவர்கள்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு... தேனியில் பெரும் சோகம்..!

அப்போது அவர்கள் ஓட்டி வந்த சைக்கிள், தேனி ரயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டை அருகில் நின்றது. இதனால் குட்டையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களின் உறவினர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் இரவு 11 மணியளவில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். இன்று அதிகாலை 3 மணி வரை தேடிப் பார்த்தும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து  காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் காலை 8 மணியளவில் குட்டைக்குள் இருந்து சிவசாந்தன், வீரராகவன் இருவரின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.

TN Weather Update: 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை எவ்ளோ தெரியுமா? இன்றைய வானிலை நிலவர


Theni: விளையாட சென்ற சிறுவர்கள்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு... தேனியில் பெரும் சோகம்..!

இரு உடல்களையும் பார்த்து அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்ற போது தண்ணீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

HipHop Adhi: '2 வருஷமா படமே வரல.. நான் இப்ப முன்ன மாதிரி இல்ல’ - வீரன் பட நிகழ்ச்சியில் ஆதி உருக்கமான பேச்சு


Theni: விளையாட சென்ற சிறுவர்கள்.. நீரில் மூழ்கி உயிரிழப்பு... தேனியில் பெரும் சோகம்..!

இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்டையானது ஆபத்தான நிலையில் உள்ளது. குட்செட் அமைப்பதற்காக மண் அள்ளியதால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து குட்டையாக உருவாகி இருக்கிறது. அந்த குட்டையில் மூழ்கி ஏற்கனவே ஒரு முதியவர் பலியாகி இருக்கிறார். கால்நடைகளும் பலியாகி உள்ளன.இருப்பினும் தினமும் இங்கு குளிப்பதற்காக பலர் வருகின்றனர். ஆபத்தான முறையில் குளிக்கின்றனர். இந்த குட்டையை மூட வேண்டும் அல்லது குட்டையை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget