மேலும் அறிய

பட்டா,சிட்டா பிரச்னைக்கு தீர்வு.. தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் அறிவித்த அறிவிப்பு இதோ

உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும்  நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.


பட்டா,சிட்டா பிரச்னைக்கு தீர்வு.. தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் அறிவித்த அறிவிப்பு இதோ

இதனால் தமிழ் நாடு முழுவதும் பட்டா மாறுதல் போன்றவைகளுக்கு ஜமாபந்தி நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல். தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பங்கள், தேனி மாவட்டத்தில்  அனைத்து வட்டங்களிலும் 22.05.2025 முதல் 30.05.2025 வரை நடைபெற உள்ள வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தியில்) ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


பட்டா,சிட்டா பிரச்னைக்கு தீர்வு.. தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் அறிவித்த அறிவிப்பு இதோ

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.


பட்டா,சிட்டா பிரச்னைக்கு தீர்வு.. தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் அறிவித்த அறிவிப்பு இதோ

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் தேதிகள் விபரம் வருமாறு:- 

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளிலும், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளிலும், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025ஆகிய தேதிகளிலும், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025 மற்றும் 29.05.2025 ஆகிய தேதிகளிலும், பழனி வட்டாட்சியர் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025, 29.05.2025, 30.05.2025 ஆகிய தேதிகளிலும், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025, 29.05.2025 ஆகிய தேதிகளிலும், வேடசந்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
Embed widget