மேலும் அறிய

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

பெரியகுளம் அருகே யானை தந்ததின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக்கொண்ட யானை தந்தம் விற்பனையாளர்கள். 2 யானை தந்தங்களை பெரியகுளம் வனச்சரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அதிகாரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்காளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தேனி மாவட்ட எல்லை பகுதியில் சந்தேகிக்கும் படி கும்பலாக இருந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும்பல்லத்தை சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை யானை தந்தம் விற்பனை கும்பல் அடித்து தள்ளி விட்டத்தில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டத்தால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

மேலும் யானை தந்த விற்பனையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் எனபவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியை சேந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயக்குமார் (60) மற்றும் வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 நபர்களையும் கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனக்காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய சுரேஷ் எனபவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

   

யானை தந்தம் விற்பனை கும்பல் பிடிப்பட்டது குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரி கூறுகையில் யானை தந்தத்தினை விற்பனை கும்பலில் ஒருவர் முன்னால் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் யானை தந்தங்கள் எவ்வளவு விலை போகும் என தொலைபேசியில் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கொடுத்த தகவலின் அடிபடையில் கடந்த 10 நாட்களாக தேவதானப்பட்டி மற்றும் பெரும்பல்லம் வனச்சரகத்தை சேர்ந்த  வனத்துறையினர் என இரண்டு வனச்சரக வனத்துறையினர் 25க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து யானை தந்தம் விற்பனை கும்பலை பிடித்ததாக தெரிவித்தார்.   

       
யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்           

இதனை தொடர்ந்து இன்று தேவதனாப்பட்டி வனச்சரக அலுவலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கைதுசெய்தவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறி தேவதானபட்டி வனச்சரக அலுவலகம் முன்பு கூடி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் உறவினர்கள் முன்பு நிறுத்தி யாரையும் அடித்து துன்புறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியும் கைது செய்யப்பட்டவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த வாகனத்தில் ஏற்றி சென்ற போது உறவினர்கள் வாகனத்தை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் தேவதானபட்டி வனச்சரக அலுவலம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  என கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget