மேலும் அறிய

கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

கொடைக்கானல் பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் ம‌ர்ம‌மான‌ முறையில் சிறுமி  உயிரிழ‌ந்த‌ சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என புகார்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமமான பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் கடந்த வாரம் 15 ஆம் தேதி புத‌ன் கிழ‌மை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப‌ள்ளி வ‌ளாக‌த்திலேயே 5ஆம் வகுப்பு சிறுமி உட‌ல் க‌ருகி உயிரிழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்தினை க‌ண்டித்தும், காவல் துறையினர் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எந்த‌வித‌மான‌ முன்னேற்ற‌ம் ஏற்ப‌டாத‌தை தொட‌ர்ந்து, கொடைக்கானல் மேல்மலைக்கிராமமான கூக்கால் ம‌லைக்கிராம‌ பொதும‌க்க‌ள் அந்த‌ப்ப‌குதியில் இய‌ங்கி வ‌ரும் கூக்கால் ந‌டுநிலை ப‌ள்ளிக்கு த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை  அனுப்ப‌ மறுத்து வருகின்றனர்,


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாச்சலூர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகளான தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார் ஆகிய மூன்று குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின்போது பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்கள் மூத்த மகளான தர்ஷினியிடம் கேட்டபோது தங்கை பிரித்திகா உணவு இடைவெளியில் இருந்தே காணவில்லை என்று கூறியுள்ளார். உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது பள்ளி சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது ”அப்பா” என்று மட்டும் கூறிவிட்டு குழந்தை இறந்திருக்கிறது.


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் இறப்பு குறித்து போலிசார் கடந்த ஒரு வாரமாக விசாரணை செய்து வருகின்ற நிலையில், விசாரணையில் எந்த ஒரு தகவலும் முன்னேற்றமும் இல்லாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  ம‌லைக்கிராம‌ங்க‌ளில் உள்ள‌ அனைத்து ப‌ள்ளிக‌ளிலும் க‌ண்காணிப்பு கேம‌ரா பொருத்தவும், ப‌ள்ளிக்கு வ‌ரும் குழ‌ந்தைக‌ளின் பாதுகாப்பினை உறுதி செய்ய‌வேண்டும் உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி ப‌தாகைக‌ளை ஏந்தியும், இது போன்ற ச‌ம்ப‌ங்க‌ள் அடுத்து ந‌டைபெற‌க்கூடாது என்ப‌தை வ‌லியுறுத்தியும் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ உண்ணாவிர‌த‌ம் மேற்கொள்ள இருப்பதாக  தெரிவித்து  கூக்கால் கிராம‌ பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள‌து எதிர்ப்பினை ப‌திவு செய்தனர்,


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

இத‌னை அறிந்த  கூக்கால் ப‌ள்ளியில் ப‌ணி புரியும் ஆசிரிய‌ர்க‌ளும், கொடைக்கான‌ல் காவ‌ல்துறையின‌ரும்  பெற்றோர்களிட‌ம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்தையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்தையில்  உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால்  கூக்கால் ம‌லைக்கிராம‌த்தில் பரபரப்பு நிலவியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget