மேலும் அறிய

ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக திமுக உள்ளது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

நாதியற்ற தமிழகத்தை காப்பாற்றுவது யார்? என்று குரல் ஒலித்து வருகிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

”நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் விவசாயிகளுக்கு கண்ணீரை துடைத்து விவசாய உரிமையை  நிலை நாட்டுவார்” - ஆர்.பி.உதயகுமார்.
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தென்மேற்கு பருவமழை குறையும் பொழுது விவசாய உற்பத்தி பாதிப்பு, கிராம பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஆகியவை ஏற்படும். இது போன்ற காலங்களில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நீர் பாசன கட்டமைப்புகளை இந்தியாவே பாராட்டு வகையில் வளர்ச்சியைப் பெற்று, இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைகளில் முதன்மையாக இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது பருவ மழை குறைவின் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை உள்ளனர். மேலும் நீர் பாசன உள்கட்டமைப்பு திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன்மையாக இருந்த நீர் பாசன உள்கட்டமைப்பு தற்போது திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பாசன பரப்பு ,பயிர் உற்பத்தி ஆகியவை பாதிப்பு ஏற்படும்.

ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக திமுக உள்ளது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
 
 
பாசன உட்கட்டமைப்புகளை சீர்படுத்த திமுக அரசு எதையும் செய்யவில்லை. அது போல் நமக்கு பெற வேண்டிய ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக உள்ளது. விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திமுகவின் செயல் உள்ளது. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 90 வது கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். அதில் தமிழக அரசின் சார்பில் வினாடிக்கு 13,000 கன அடியை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கூறப்பட உள்ளது.

ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக திமுக உள்ளது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
 
 
ஆனால் இதற்கு உரிய அழுத்தத்தை முதலமைச்சர் கொடுக்கவில்லை. ஆனால் கர்நாடகா அரசின் முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து நமக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நம்மை பாதுகாக்க வேண்டிய, நமது உரிமையை பெற்று தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இதற்கு தீர்வு காணாமல், விவசாயின் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கும் சிந்தனையில் இருக்கிறார்கள் தவிர, விவசாயிகளை வாழ வைப்பதற்காக எந்த முயற்சி எடுக்கவில்லை. கர்நாடக அரசை கண்டித்து கண்டனமும் இதுவரை தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். இன்றைக்கு விவசாயிகளை காப்பாற்றுவது யார்? நாதியற்ற தமிழகத்தை காப்பாற்றுவது யார்? என்று குரல் ஒலித்து வருகிறது. நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் விவசாயிகளுக்கு கண்ணீரை துடைத்து விவசாய உரிமையை  நிலை நாட்டுவார் என கூறினார்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget