மேலும் அறிய

Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

திண்டுக்கல் மாவட்டம் பழனி  மலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூன்றாவது நாளாக எண்ணப்பட்டதில் மொத்த வருவாய் 7 கோடி ரூபாயை தாண்டியது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1, 2-ந் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து 4-ந் தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.


Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில், துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஒவ்வொரு உண்டியல்களாக திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில் நாணயங்களை எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. அதன்பின்னர் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதன் மூலம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 479 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 401 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 264 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 5 கிலோ 820 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

இதனைத் தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை, நேற்று புதன்கிழமை எண்ணப்பட்டதில் ரொக்கமாக 5 கோடியே  9 லட்சத்து 80 ஆயிரத்து  479 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 894 கிராமும், வெள்ளி 29 ஆயிரத்து 417 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2372 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கைகள் மூன்றாவது நாளாக ரொக்கமாக 7 கோடியே  17 லட்சத்து 42 ஆயிரத்து  126 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.


Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

மேலும் தங்கம் 1 கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ ஆயிரத்து 277 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நிறைவுபெற்றதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget