மேலும் அறிய

Palani: பழனியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு செங்குந்த முதலியார்கள் தெய்வச்சிலை செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு

பட்டயத்தில் எழுத மிகுந்த இடமிருந்த போதும் இவ்வாறு 6 வரிகளில் மடக்கி எழுதப்பட்டிருப்பது முருகனுக்குரிய எண் 6 என்பதால் இருக்கலாம்.

பழனி மலைக்கோயில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயன் கருப்பையா ஆகியோர் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து அதைப் படித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் பட்டயத்தை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி அதுகுறித்து கூறியதாவது, இந்த தெய்வச்சிலை செப்புப் பட்டயம், செங்குந்த முதலியார்கள் சூரசம்ஹார மண்டகப்படியை ஒட்டி வழங்கிய பட்டயம் ஆகும். இந்தப் பட்டயம் 1.7 கிலோ எடையுடனும் உயரம் 18 செ.மீ. நீளம் 45 செ.மீ என்ற அளவுகளுடனும் உள்ளது. பட்டயத்தின் முன்புறம் மேலே சூரிய சந்திரர்களும் அதன் அடியில் முருகன் பிள்ளையாருடன், செங்குந்தர்களின் குலதெய்வங்களான நவவீரர்கள் கைகளில் வாள் கேடயத்துடன் பொறிக்கப்பட்டுள்ளனர்.


Palani: பழனியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு செங்குந்த முதலியார்கள் தெய்வச்சிலை செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு

முருகனின் வலதுபுறம் செங்குந்தம் எனும் ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் பின்புறம் தமிழ் எழுத்துகள் வலதுபுறமும் வடமொழி கிரந்த எழுத்துகள் இடது புறமும் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பகுதியில் சண்முக வாத்தியாரின் பேரன் ஒரு ஓலைச்சுவடி எழுதியதாகவும் அதைப்பார்த்து நஞ்சய பண்டாரம் என்பவர் செங்குந்த முதலியார்களின் வேண்டுகோள்படி தாமிரசாசனப்பட்டயம் எழுதியதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. வடமொழி கிரந்தப்பகுதியில் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஸகாயம் (தண்டபாணி துணை) என்று எழுதப்பட்டுள்ளது. அதனடியில் பழநிமலை ஸ்தவராஜபண்டிதர் கையொப்பம் இட்டுள்ளார்.


Palani: பழனியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு செங்குந்த முதலியார்கள் தெய்வச்சிலை செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு

தமிழ், கிரந்தம் இரண்டு எழுத்துப் பொறிப்புகளும் 6 வரிகளில் மடக்கி மடக்கி எழுதப்பட்டுள்ளன. பட்டயத்தில் எழுத மிகுந்த இடமிருந்த போதும் இவ்வாறு 6 வரிகளில் மடக்கி எழுதப்பட்டிருப்பது முருகனுக்குரிய எண் 6 என்பதால் இருக்கலாம். செப்பேடு குறிப்பிடும் சண்முகவாத்தியார் யார் என்பது தெரியவில்லை. ஓலைச்சுவடியை செப்புப் பட்டயத்தில் எழுதிய அவரின் பேரனின் பெயரையும் பட்டயம் குறிப்பிடவில்லை. ஆகவே சண்முகவாத்தியார் பேரன் ஓலைச் சுவடியில் என்ன எழுதினார் என்பதும் அதை செங்குந்த முதலியார்களின் வேண்டுகோளுக்கிணங்க நஞ்சய பண்டாரம் எவ்வாறு செப்புப் பட்டயம் எழுதினார் என்பதும் தெரியவில்லை.


Palani: பழனியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு செங்குந்த முதலியார்கள் தெய்வச்சிலை செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு

தற்போதைய செங்குந்த முதலியார்களின் இந்த தெய்வங்களுடன் கூடிய பட்டயத்தை சூரசம்ஹார மண்டகப்படிக்கு எடுத்துச்செல்வது வழக்கமாக உள்ளதால், இது தொடர்பான மூல செப்புப் பட்டயம் ஒன்றை நஞ்சய பண்டாரம் எழுதி இருப்பார் என்பது புலனாகிறது. தற்போதைய பட்டயத்தின் எழுத்தமைதி கி.பி. 18ஆம் நூற்றாண்டு. ஆகவே இதற்கு முன்பு மூல செப்புப்பட்டயமும் அதற்கும் முன்பே ஓலைச் சுவடியும் இருந்திருக்க வேண்டும். அந்த இரண்டுமே தற்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆகவே செங்குந்த முதலியார்கள் பழனிமலை முருகனுக்கு அளித்த கொடை மற்றும் அது தொடர்பான கட்டளை பற்றி நம்மால் அறியமுடியவில்லை. இந்த ஆய்வின் போது ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம் மற்றும் அஜய்கிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget