பழனி முருகன் கோயில் உண்டியல்: பக்தர்கள் காணிக்கையாக குவித்தவை! தங்கம், வெள்ளி, ரொக்கம் எவ்வளவு தெரியுமா?
பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில், தங்கம், வெள்ளி மற்றும் சுமார் 3.53 கோடி ரூபாய் ரொக்கப் பணம் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், தங்கம், வெள்ளி மற்றும் சுமார் 3.53 கோடி ரூபாய் ரொக்கப் பணம் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.

இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் மற்றும் அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் அனைத்தும் முறைப்படி திறக்கப்பட்டு காணிக்கை எண்ணிக்கை செய்யப்பட்டன. இதில் மலைக்கோயில் உண்டியல்கள் மூலம் மட்டும் 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630 ரூபாய் வசூலாகியுள்ளது. இதேபோல் திருஆவினன்குடி கோயில் உண்டியல் மூலம் 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சேர்த்து, ரொக்கப் பணமாக மட்டும் 3 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 665 ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது. மேலும், தங்கம் 576 கிராம், வெள்ளி 8 கிலோ 886 கிராம் (8886 கிராம்) மற்றும் 1630 எண்ணிக்கை கொண்ட வெளிநாட்டுச் செலாவணி நோட்டுகளும் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன. கோயில் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பணியாளர்களின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இன்று முழுமையாக நிறைவடைந்தன
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















