மேலும் அறிய
மதுரை முருக பக்தர்கள் மாநாடு பணி தீவிரம்.. மின்னொளியில் ஜொலிக்கும் மாநாட்டுத் திடல் !
முருக பக்தர்கள் மாநாட்டில் கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மதுரை முருக மாநாடு
Source : whats app
முருக பக்தர்கள் மாநாட்டுப் பகுதிகளில் இரவிலும் பணிகள் தீவிரமாக தொடர்கிறது.
முருக பக்தர்கள் மாநாடு
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதான திடலில் நாளை ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. 2023ல் நடக்க வேண்டிய மாநாட்டிற்கான பணிகள் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும். திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரத்தையடுத்து முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'முருக பக்தர்கள் மாநாடு' எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது. திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
5 நாட்களில் 75 ஆயிரம் பேர் வந்து தரிசனம்
மாநாட்டுப் பணிகள் மும்முரமாக இரவிலும் நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் மேடையில் அறுபடை வீடுகள் அமைப்பு அமைக்கப்பட்டு மின்னொளியில் மாநாட்டு மேடை ஜொலிக்கிறது. மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 75 ஆயிரம் பேர் வந்து தரிசனம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நாளையும் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை முயற்சியா?
முருக பக்தர்கள் மாநாட்டு மேடை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள், மின்விளக்கு கோபுரம் என அமைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதே போல் பல இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு அரங்கில் வெளியில் அதிகளவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முருக பக்தர்கள் மாநாட்டில் கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு





















