மேலும் அறிய
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. திறந்தாச்சு அறிவியல் பூங்கா: அறிவுத்திறனை வளர்க்க புதிய வாய்ப்பு!
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவியல் பூங்கா
Source : whatsapp
மதுரை மாநகராட்சி திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அறிவியல் பூங்காவினை” வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்- 94 திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு இன்று (03.02.2026) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் ஆணையாளர் சித்ரா விஜயன், தலைமை வகித்தார்கள், அமைச்சர் அவர்கள் பேசியததாவது..,” தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி தமிழகத்தை முதன்மையான மாநிலமாக உருவாக்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 திருநகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் O & M Deficit Grand Fund (Phase 04) 2024-2025 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் அறிவியல் உபகரணங்கள் 100 எண்ணம், பேவர் பிளாக் நடைபாதை, அமரும் இருக்கைகள், மின்விளக்குகள், கண்காணிப்பு கேமிராக்கள், மேற்கூரை, நுழைவுச்சீட்டு வழங்கும் இடம் மற்றும் நுழைவுவாயில், உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவினை பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவியல் பூங்காவிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பார்வையிடுவது அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
அறிவியல் சார்ந்த உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்பாடு
இங்கு அமைக்கப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, கல்வி அலுவலர் மோகன், உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, உதவிப் பொறியாளர் அருள்சகாயசேவியர், மாமன்ற உறுப்பினர்கள் ஸ்வேதா, சிவா, ரவிச்சந்திரன், விஜயா, இந்திராகாந்தி, கருப்ப சாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























