மேலும் அறிய
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள், மருத்துவ உதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நீட் தேர்வு
Source : whatsapp
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு - NEET EXAM-National Eligibility cum Entrance Test) 21.06.2026 நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது.
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு - NEET EXAM-National Eligibility cum Entrance Test) வருகின்ற 21.06.2026 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நடைபெற உள்ளது.
தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஈ.எம்.ஜி.யாதவா கல்லூரி (பெண்) (மையம் A), ஈ.எம்.ஜி.யாதவா கல்லூரி (பெண்) (மையம் B), என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, OCPM பெண்கள் உயர்நிலைப் பள்ளி, செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி, யாதவா கல்லூரி (ஆண்) (மையம் A), யாதவா கல்லூரி (ஆண்) (மையம் B), PM SHRI கேந்திரிய வித்யாலயா எண் 1, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (A), இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, MNU ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளி, PM SHRI கேந்திரிய வித்யாலயா எண் 2, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (B), மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்லூரி, டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி போன்ற 15 தேர்வு மையங்களில் தேர்வு சிறப்பாகவும், முறையாகவும் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள்
தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள், மருத்துவ உதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நாளன்று தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களை சென்றடைய தேவையான போக்குவரத்து வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, தேர்வு மையங்களின் சுற்றுப்புற கண்காணிப்பு, வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் துறைவாரியான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















