மேலும் அறிய

மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!

பல ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த போக்குகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. - மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.

மின்சார துறையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்-மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார பேட்டி.
 
கபடிப் போட்டியை துவங்கி வைத்த அமைச்சர்
 
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து கபடி போட்டியை காண வந்த தொண்டரின் ஒருவரின் மகளை அழைப்பு தனது மடியில் வைத்துக் கொண்டு அந்த சிறுமியுடன் கபடி போட்டியை கண்டு களித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர்
 
புதிய ஐந்து எரிசக்தி மண்டலங்களால் பொது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த கேள்வி.
 
சோலாரில் அதிகமான இன்வெஸ்ட்மென்ட் செய்யப்படுவதால் கடந்த 5ஆண்டுகளில் அதிகமான விதிமுறைகளும் முறைகளும் நடைபெற்றுள்ளன. நான் கேள்விப்பட்ட வரைக்கும் தனிநபரை வைத்து ஒரு மெகா வாட் 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அப்ளிகேஷன் உள்ளே போகும். அதற்கான இடத்தை அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதில், 10 லட்சம் பெறுமானம் உள்ள இடத்தை இட புரோக்கர்களிடம் பல கோடி கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்படும். தமிழ்நாட்டில் 256க்கும் மேல் கோல்ட் சப்சன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 2.20 பைசாக்கு விற்கக்கூடிய சோலார் நடுவில் இருக்கும் இடைத்தரகர்களால் பல மடங்கு செல்லும் கடந்த 10 வருடமாக நடந்த விதிமுறைகள் முதல்வரின் ஆலோசனைப்படி அனைத்தும் லாபிகளும் உடைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரண்டான ஒரு சிஸ்டத்தை விரைவில் லாஞ்ச் பண்ண உள்ளோம். திருநெல்வேலி, உடுமலை சென்டரில் பெரும்பாலான புரோக்கர்கள் செயல்பட்டார்கள் அதை முழுவதுமாக முடிக்கப்பட்டது. பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். டிரான்ஸ்பரண்டான ஒரு போர்டல் அடுத்த பத்து நாட்களில் உருவாக்கப்படவுள்ளது இனி யாரும் ஒரு மெகாவெட் 25 லட்சம் கொடுக்க வேண்டியது இல்லை.
 
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை எப்போது வரும் அதில் நடிந்த ஊழல் கண்டறியப்படுமா‌ குறித்த கேள்விக்கு: 
 
மின்சாரத் துறை தரப்பில் வெள்ளை அறிக்கை வரும் வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் இந்தத் துறையின் நிலை என்ன எந்தெந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டது எந்தெந்த இடங்களில் ஊழல் நடந்தது என்று வெளியிடுவோம்.
 
செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு: 
 
தெரியலை பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் உத்தமர் செந்தில் கடந்த 10 வருடங்களில் பாலாஜி பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. எந்த வழக்கு என்ன என்று தெரியவில்லை அந்தந்த துறைகளுக்கு தான் தெரியும். இந்த வருடம் புதிதாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். பழைய ஆட்சியில் உத்தரவாதம் கொடுத்தவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தத் துறையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர்களை வேலைக்கு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம். குற்ற சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முந்தயை ஆட்சியில் குற்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டன மூடி மறைக்கும் வேலையில் அரசாங்கம் ஈடுபட்டது. இந்த ஆட்சியில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள் விசாரணையில் தவறில்லை ஏதும் இல்லை அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது இதற்கான ரிசல்ட் கூடிய விரைவில் பார்ப்பீர்கள். 
 
ஆவண படுகொலை சட்டம் நிறைவேற்றப்படுமா குறித்த கேள்விக்கு:
முதல்வர் தலைமையில் அது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முடிந்தவுடன் கண்டிப்பாக தெரிவிக்கிறோம்.
 
மின்தடை எதற்காக தடை ஏற்படுகிறது.
 
எதனால் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை சார்பாக அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னர் மின்சாரத் துறையில் பொதுமக்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்றார்கள் ஆனால் தற்போது மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கையிலும் நிறைவேற்றி வருகிறோம். 
 
மின்சாரம் டிரான்ஸ்பார்ம் பராமரிப்பு பணிக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ஆயில் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு: 
 
டிரான்ஸ்பாரம் டெண்டர் எஸ்டிமேட் பண்ணுவதில் தவறு உள்ளது அதனை சீரமைப்பதற்கான வேலை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் எந்த டெண்டரும் வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். எட்டு லட்ச ரூபாய் ட்ரான்ஸ்பாரம் 13 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுகிறது. இந்த அரசுக்கு எந்த கமிஷனும் வேண்டாம் மக்களுக்கும் நிறுவனத்திற்கும் செல்லக்கூடிய பணம் அங்கு சொல்லட்டும். டெண்டர் எதுவும் நிறுத்தப்படவில்லை.
 
டிரான்ஸ்பரம் ஊழல் சிபிஐ விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணத்தை திருடியவர்கள் அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு திமுகவுடன் இணக்கமாக இருக்கும் காரணத்தால் செந்தில் பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு அனுப்பினோம் ஆனால் கவர்னர் அலுவலகத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கவில்லை. பல மாதமாக தூங்கிக் கொண்டிருந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளோம் இதுவரை கவர்னர் ஏன் பிடித்து வைத்திருக்கிறார். இனிமேல் சிபிஐ நடவடிக்கை எடுக்குமா சிபிஐயும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்படுகிறார்களா அதனால்தான் கவர்னர் செந்தில் பாலாஜி மீதும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை இணைந்து செயல்படுகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget