மேலும் அறிய

மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா? நீதிபதிகள் கேள்வி

மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்

மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரிய மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவ்வாறிருக்கையில் அவர் தற்போதைய அறிக்கையைக் கோர இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மதுரை, யாகப்பா நகரைச் சேர்ந்த இருளாண்டி, மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கழிவை அகற்றும் பணியின்போது ஏற்படும் மனித மரணங்கள் தொடர்ந்துகொண்டே போகிறது. இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவை அரசே மதிக்காத நிலை உள்ளது. இழப்பீடு வழங்கும் உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

தூய்மை இந்தியா திட்டத்திற்காக 2018-19ம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக உள்ளாட்சிகளில் 35 ஆயிரம் பேர் தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர். எனவே, தமிழக தூய்மை பணியாளர்கள் நலன் கருதி, மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவ்வாறிருக்கையில் அவர் தற்போதைய அறிக்கையைக் கோர இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 


கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்கு என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்? அரசியலமைப்பு வழிபாட்டு உரிமையை மதித்து நடப்பதால் பல சமயங்கள் நடைமுறையில் உள்ளன.- மதுரைக்கிளை நீதிமன்றம்

 உலகம்  பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்துவரும் அதே சமயம், கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்று இருக்கும் சூழலும் நிலவுகிறது- நீதிபதிகள்

ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு : வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில், விநாயகர் கோவில் என 2 கோயில்கள் உள்ளன. 

கடந்த 2009ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது, 2(தேவர், கவுண்டர்) சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. விநாயகர் கோவிலின் திருவிழாவை ஒரு சமூகத்தினரும், மந்தையம்மன் திருவிழாவை மற்றும் சமூகத்தினரும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அவை தவிர பிற நாட்களில் இரண்டு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் விநாயகர் கோவிலை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களது கோவில் என உரிமை கொண்டாடுவதோடு,  அவர்களது சமூக தலைவரின் சிலையையும் கோவிலில் வைத்துள்ளனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல், கோவிலை பூட்டி வைக்கும் சூழலும் உள்ளது. ஆகவே ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்கு என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்? அரசியலமைப்பு வழிபாட்டு உரிமையை மதித்து நடப்பதால் பல சமயங்கள் நடைமுறையில் உள்ளன. உலகம்  பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்து வரும் அதே சமயம், கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்று இருக்கும் சூழலும் நிலவுகிறது என கருத்து தெரிவித்து, வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget