மேலும் அறிய

மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்

குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விவேக் குமார் சிங் கருத்து தெரிவித்த நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள குப்பை கழிவுகள் ஜே.சி.பி. மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
 

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார்

 
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பை கழிவுகளை அன்றாடம் தீயிட்டும் எரித்து வந்தனர். இதனால் காற்று மாசடைவதுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர்.
 

குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது

 
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி மாசடைந்து இருப்பதாக நேற்று நீதிபதி விவேக் குமார் சிங் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகத்தின் பின்புறம் உள்ள மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால் அந்தப் பகுதியை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகம் மாசடைந்து இருப்பதாகவும், கோவில் மாநகரமான மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மாநகரம் போல் மாறிவிட்டதாக வேதனையுடன் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்திருந்தார்.
 

குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது 

 
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா  ஆகியோர் தலைமையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள பகுதியில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் கொட்டப்பட்டு இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
 

ஏன் புகார் அளிக்கவில்லை

 
நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது துரிதமாக நடைபெறும் இந்த குப்பைகள் அகற்றும் பணி மீண்டும் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பணியின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி, இன்ஜினியர் சுரேஷ், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர். குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
பழனி முருகன் கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கை! தங்கம், வெள்ளி வசூல் விவரம் வெளியீடு.
பழனி முருகன் கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கை! தங்கம், வெள்ளி வசூல் விவரம் வெளியீடு.
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget