மேலும் அறிய
மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்
குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.

குப்பை கழிவுகள் அகற்றும் பணி
Source : whats app
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விவேக் குமார் சிங் கருத்து தெரிவித்த நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள குப்பை கழிவுகள் ஜே.சி.பி. மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பை கழிவுகளை அன்றாடம் தீயிட்டும் எரித்து வந்தனர். இதனால் காற்று மாசடைவதுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர்.
குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி மாசடைந்து இருப்பதாக நேற்று நீதிபதி விவேக் குமார் சிங் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகத்தின் பின்புறம் உள்ள மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால் அந்தப் பகுதியை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகம் மாசடைந்து இருப்பதாகவும், கோவில் மாநகரமான மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மாநகரம் போல் மாறிவிட்டதாக வேதனையுடன் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்திருந்தார்.
குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா ஆகியோர் தலைமையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள பகுதியில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் கொட்டப்பட்டு இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
ஏன் புகார் அளிக்கவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது துரிதமாக நடைபெறும் இந்த குப்பைகள் அகற்றும் பணி மீண்டும் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பணியின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி, இன்ஜினியர் சுரேஷ், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர். குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் ரூ.70 ஆயிரம் லஞ்சத்தை பெற்ற சார்பதிவாளர் - போலீசார் பொறியில் சிக்கியது எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion