மேலும் அறிய

மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்

குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விவேக் குமார் சிங் கருத்து தெரிவித்த நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள குப்பை கழிவுகள் ஜே.சி.பி. மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
 

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார்

 
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பை கழிவுகளை அன்றாடம் தீயிட்டும் எரித்து வந்தனர். இதனால் காற்று மாசடைவதுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர்.
 

குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது

 
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி மாசடைந்து இருப்பதாக நேற்று நீதிபதி விவேக் குமார் சிங் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகத்தின் பின்புறம் உள்ள மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால் அந்தப் பகுதியை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகம் மாசடைந்து இருப்பதாகவும், கோவில் மாநகரமான மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மாநகரம் போல் மாறிவிட்டதாக வேதனையுடன் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்திருந்தார்.
 

குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது 

 
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா  ஆகியோர் தலைமையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள பகுதியில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் கொட்டப்பட்டு இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
 

ஏன் புகார் அளிக்கவில்லை

 
நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது துரிதமாக நடைபெறும் இந்த குப்பைகள் அகற்றும் பணி மீண்டும் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பணியின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி, இன்ஜினியர் சுரேஷ், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர். குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget