மேலும் அறிய

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - நீதிபதிகள் கேள்வி

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
 
சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது.  இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 
 
குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 

மற்றொரு வழக்கு
 
மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், "எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சைசெய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
 
சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. 
 
ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget