மேலும் அறிய

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - நீதிபதிகள் கேள்வி

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
 
சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது.  இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 
 
குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 

மற்றொரு வழக்கு
 
மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், "எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சைசெய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
 
சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. 
 
ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Embed widget