மேலும் அறிய

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - நீதிபதிகள் கேள்வி

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
 
சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது.  இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 
 
குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 

மற்றொரு வழக்கு
 
மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், "எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சைசெய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
 
சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. 
 
ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
கொடைக்கானலில் முதன்முறை! மலைப்பூண்டு கண்காட்சி & பயிற்சி: அறியாத ரகசியம், மருத்துவ குணம், ஏற்றுமதி வாய்ப்புகள்!
கொடைக்கானலில் முதன்முறை! மலைப்பூண்டு கண்காட்சி & பயிற்சி: அறியாத ரகசியம், மருத்துவ குணம், ஏற்றுமதி வாய்ப்புகள்!
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Embed widget