மேலும் அறிய

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - நீதிபதிகள் கேள்வி

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
 
சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது.  இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 
 
குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 

மற்றொரு வழக்கு
 
மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், "எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சைசெய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
 
சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. 
 
ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
TN 12th Result 2026: தேனியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் சாதனை!.. 51 பள்ளிகள் 100% தேர்ச்சி!..
TN 12th Result 2026: தேனியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் சாதனை!.. 51 பள்ளிகள் 100% தேர்ச்சி!..
மதுரை ரயில்வே கோட்ட மொத்த வருமானம் ரூபாய் 1408 கோடியாக உயர்வு !
மதுரை ரயில்வே கோட்ட மொத்த வருமானம் ரூபாய் 1408 கோடியாக உயர்வு !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்கிரஸ் வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
CM Vijay Speech: ”ஆட்டம்போடலாம்னு நினைக்காதிங்க” முதல் நாளே அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த CM விஜய்
”ஆட்டம்போடலாம்னு நினைக்காதிங்க” முதல் நாளே அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த CM விஜய்
CM Vijay:
CM Vijay: "100 சதவீதம் நம்புகிறேன்.." விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கருணாநிதி பேத்தி நம்பிக்கை
Embed widget