மேலும் அறிய

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - மதுரையில் கோலாகலம்

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் பிரதான நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா 2024

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று 5ஆம் நாள் நிகழ்வாக அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பாக பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் இரவு வரை அண்ணாநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் விடிய விடிய எழுந்தருளி வண்டியூர் வீர ராகவபெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.  இதனையடுத்து இன்று காலை வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது.

சாப விமோசனம்:

பின்னர் ஏகாந்த சேவையில் உலர்திராட்சை மாலை, பாதாம் பருப்பு மாலை மற்றும் தாமரை மாலை ஆகிய மாலைகளை அணிந்தபடி எழுந்தருளிய கள்ளழகர் வீர ராகவ பெருமாள் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் புறப்பாடகிய கள்ளழகர் பல்வேறு பகுதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வண்டியூர் பகுதியில்  வைகையாற்றின் மையத்தில் உள்ள தேனூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேனூர் மண்டகபடியில் எழுந்தருளினார்.

ஆண்டுதோறும் மண்டகபடியின்  கீழ் பகுதியிலயே சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றுவந்த நிலையில் 62ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக தேனூர் மண்டபத்தில்  உள்பகுதியில் கள்ளழகர் எழுந்திருனார்.

மண்டூகமான நீ தவளையாகவே போ

இதனைத்தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்ற வடிவமைக்கப்பட்டு நீர் நீரப்பபட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டு நாரை ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சேஷ வாகனத்தில் இருந்து  சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு  முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த நாரை பூஜைக்குப் பின்னர் பறக்கவிடப்பட்டது.

பின்னர் மண்டூக முனிவரின் உருவ மண் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது. சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்ததால்  சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தபோது தவத்தில் இருந்ததால் சுதபஸ் முனிவர் துர்வாசரை கவனிக்காமலும், சரியாக உபசரிக்கவில்லை என்பதாலும்  கோபமுற்ற துர்வாச முனிவர் கோபம் மரியாதை தெரியாத மண்டூகமான நீ தவளையாகவே போ என சாபமிட்டார்.

சாமி தரிசனம்:

இதனால் சாபம் பெற்ற சுதபஸ் முனிவர் தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என துர்வாச முனிவரிடம் வேண்டியபோது  'வேதவதி' என்ற வைகையாற்றில் தவம் செய்தால் அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜ பெருமாள் வரும் போது சாப விமோசனம் கிடைக்கும் என்ற வரலாற்றின் அடிப்படையில்  இந்த மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது, என்பது குறிப்பிடத்தக்கது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு.

இதனையடுத்து தேனூர் மண்டகப்படியை வலம் வந்த கள்ளழகர் அங்கிருந்த புறப்படாகியபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கள்ளழகர் வண்டியூர் அனுமார் கோயிலில் எழுந்தருளி  பின்னர் வைகை வடகரை பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் திருமஞ்சனம் ஆகிய பின்னர் இன்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய தசாவதாரம் நிகழ்வு நடைபெறும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thadi Balaji meets Chinnadurai : சாதித்து காட்டிய சின்னதுரை.. ஓடி வந்த தாடி பாலாஜிCow Baby Shower : ’’எங்க வீட்டு மகாலட்சுமி’’பசுவுக்கு வளைகாப்பு!அசத்திய தென்காசி தம்பதிRahul gandhi vs Modi : ’’முன் அனுபவம் உள்ளதா?’’அம்பானி அதானியுடன் டீல்?மோடிக்கு ராகுல் பதிலடி!Sam Pitroda Resigns : இனவெறி கருத்தால் சர்ச்சை..காங். தலைவர் ராஜினாமா !வலுக்கும் கண்டனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த  நடிகர் தாடி பாலாஜி
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த நடிகர் தாடி பாலாஜி
Rashmika Mandanna: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
Embed widget