மேலும் அறிய

உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?

மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக செயல்படும் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டம்:

இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருந்த நிலையில், மாற்று இடம் இதுவரை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாற்று இடம் தராமலே அப்பகுதி மக்களை காலி செய்ய காவல்துறையினரும், அதிகாரிகளும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலைய விரிவாக்கம்:

இதுவரை 146 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் மாற்று இடம் வழங்காமல் அரசு தங்களை மாறக்கூறுவது ஏற்புடையதல்ல என்று பொதுமக்கள் அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் தண்ணீர், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் மேலும் பல நாடுகளுக்கு மதுரையில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசு விமான நிலையத்தை விரிவாக்க திட்டமிட்டது. இதையடுத்து, விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு  கிராம நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பட்டாக்களையும் அரசு பெற்றுள்ளது.  அதற்கான இழப்பீடும் வழங்கியுள்ளது.

தற்காலிக வாபஸ்:

அதேசமயம் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம், அரசு வேலை வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதே அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு ஆகும். திடீரென அரசு அதிகாரிகள் இன்று வீடுகளை காலி செய்ய வலியுறுத்தியதும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உரிய கால அவகாசமும், மாற்று இடமும் வழங்கக்கோரி இன்று காலை முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, அப்பகுதி மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
உயிருக்கு ஆபத்தான ரீல்ஸ் பைக் சாகசம்: 6 பேர் மீது வழக்கு, பைக்குகள் பறிமுதல், அபராதம்!
உயிருக்கு ஆபத்தான ரீல்ஸ் பைக் சாகசம்: 6 பேர் மீது வழக்கு, பைக்குகள் பறிமுதல், அபராதம்!
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!
மதுரையில் கஞ்சா, ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்: அதிரடி கைது!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Embed widget