மேலும் அறிய
அரசு நியமனங்களில் தவறில்லை... முதலமைச்சர் உதவியாளர்கள் குறித்து - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் !
நம்பிக்கையான நபர் கர்நாடகத்தை சேர்ந்தவர்அரசியலுக்காக சொல்கிறார்கள் நம்பிக்கையான நபர் இதனை பூதாகரமாக்குவதற்கு ஒன்றுமில்லை.

அமைச்சர் நிர்மல்குமார்
Source : whatsapp
தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு பதவி வழங்குவதாகவும் திரிஷா துணை முதலமைச்சரீக பதவி வழங்கப்படுமா? என்ற உதயகுமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதில்.
அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். "எல்லா அரசுகளும் ஆலோசகர்களை வைத்திருக்கிறார்கள். யார் யார் நம்பிக்கையாக இந்த அரசை கொண்டு வருவதற்கு உறுதியாக இருந்தார்களோ, அவர்களை நியமித்திருக்கிறார்கள். பொருத்தமில்லாதவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
முயற்சிகள் வேலைகள் துவங்கப்பட்டுவிட்டது
இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது, என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குறிப்பிட்டதை பொதுவெளியில் பேச வேண்டாம், என நினைக்கிறேன். இது குறித்து அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், நாம் நேரமும் கேட்டோம், நேரம் கொடுக்கப்படவில்லை. கண்டிப்பாக மேல்முறையீடு செய்வோம்; அன்றே அதற்கான முயற்சிகள் வேலைகள் துவங்கப்பட்டுவிட்டது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்குவது குறித்த கேள்விக்கு?
நிறைய இடங்களில் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே தற்காலிகமாக இயங்கி வருகிறது. அரசு நிலங்களை அடையாளம் கண்டு ஷெட் போடுவதற்கான வேலையை தொடங்கவுள்ளோம். எங்கெல்லாம் கொள்முதல் நிலையங்கள் தனியார் இடங்களில் இயங்க வருகிறதோ, அதனை கண்டறிந்து அதனை அரசு இடங்களுக்கு மாற்றவுள்ளோம்.
மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் பாதிப்பு குறித்த கேள்விக்கு?
மதுரை மாநகராட்சியில் இப்போதுள்ள ஒப்பந்த நிறுவனம் பல முறைகேடுகளை செய்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்ய கூறியிருக்கோம், கடந்த மாதம் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிறுவனம் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய உள்ளார்கள். கழிவுமேலாண்மை தனியாரிடம் தான் கொடுத்தாக வேண்டும் ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்களை எந்த தொந்தரவும் செய்யப் போவதில்லை ; முன்பு உள்ளதையே பின்பற்றப் போகிறோம்.
ஹார்டிஸ்க் காணாமல் போனது குறித்த கேள்விக்கு?
சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறார்கள் வெள்ளை அறிக்கை பேசும்போது சொன்ன கண்டக்டர் டெண்டரில் 9 டெண்டரில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான புகார் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்திருக்கிறோம். விரைவாக அதிலும் வழக்குப்பதிவு செய்யப்படும். எதை மறைப்பதற்காக ஹார்டிஸ்க் திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதெல்லாம் உள்ளடக்கி ஹார்டிஸ்க் கூட திருடப்பட்டிருக்கலாம். கண்டிப்பாக இதை சிபிசிஐடி அறிக்கையாக தருவார்கள் அதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்.
செங்கோட்டையன் சொல்லும்போது வார்த்தையை மட்டும் தவறாக குறிப்பிட்டுள்ளார்
மதுரை மாநகராட்ச பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளி ஐடி கார்டு சாதி இடம்பெறும் என்ற விவகராத்தில் கண்டிப்பாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதுபோன்று எந்த சாதிப் பெயரையும் இடம்பெறபோவதில்லை; சாதி சான்றிதழ் பள்ளிகளில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை விரைவாக கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என சொல்கிறார். அதில் சின்ன தவறுதலாக ஐடி கார்டாக கொடுப்போம் என்றார். அந்த மாதிரியான எந்த திட்டமும் கிடையாது. செங்கோட்டையன் சொல்லும்போது வார்த்தையை மட்டும் தவறாக குறிப்பிட்டுள்ளார். பதற்றத்தில் சொல்லிவிட்டார் ; அதில் ஒரு விஷயம் மட்டும் மிஸ் ஆகிவிட்டது. அவர் சொல்லும்போது தவறுதலாகிவிட்டது. மின்வெட்டை சரி செய்வதற்கான எல்லா வேலைகளும் கூடுதல் பணியாளர்ளை வைத்து செய்து கொண்டிருக்கிறோம். நிரந்தரமான தீர்வுக்கும் என்னென்ன வழிகள் உள்ளதோ அதனை செய்கிறோம்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















