மேலும் அறிய

கணவரின் பணப்பலன்களை வழங்க கோரிய எச்ஐவி பாதித்த இரண்டாவது மனைவி - உறுதிமொழி அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

வாரிசுதாரர்கள் தான் மற்றும் தனது பிள்ளைகள் மட்டுமே என மனுதாரர் உறுதிமொழி அளிக்கவும் அதன் அடிப்படையில் நான்கு வாரத்திற்குள் பணப்பலன்களை வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது கணவரின் பணப் பலன்களை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கணவர் 1992 முதல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார் கடந்த 2015 ஜனவரி மாதம் பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். மனுதாரர் தனது பிள்ளைகளுமே வாரிசுதாரர்கள் எனக்கோரி பணப்பலன்களை வழங்குமாறு கூறியுள்ளார்.  மனுதாரரின் கணவர் ஏற்கனவே வேறு ஒருவரை திருமணம் செய்து முறையாக விவாகரத்து பெறாமல் இருவரும் பிரிந்துள்ளனர்.

மேலும் எனது முதல் மனைவி மற்றும்  தாயாரும் இறந்துவிட்ட நிலையில் மனுதாரர் அவரது பிள்ளைகளுமே வாரிசுகளாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதோடு மனுதாரர் அவரது மகனும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மனுதாரர் தன்னையும் தனது பிள்ளைகளையும் தவிர வாரிசுதாரர்கள் வேறு யாரும் இல்லை என உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரிந்து மனுதாரரின் கணவரது பணப்பலன்களை 4 நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக போக்குவரத்துக் கழகத்தின் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து  முடித்து வைத்தார்.


 

பிரச்சினைக்கு தீர்வுகாண மேல் அதிகாரிகள், மேல்முறையீடு, சீராய்வு, மறு சீராய்வு மனு என பல்வேறு வாய்ப்புகள் உள்ள நிலையில், அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், நேரடியாக நீதிமன்றத்தை அனுகுவது  முறையாகாது-நீதிபதி

 
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்  பிச்சையா. இவர் பணியிலிருந்த போது தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக 1994-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  இதை எதிர்த்து பிச்சையா தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிச்சையாவை மீண்டும் பணியில் சேர்க்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பணியில் சேர்க்கப்பட்டு 2011-ல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். தனக்கு பணப்பலன்கள், ஓய்வூதிய பலன்கள் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் தனது பணப்பலன், ஓய்வூதியப் பலன் சரியாக கணக்கிடப்படவில்லை. ஆகவே, இது தொடர்பாக மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் 2019-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பணபலன், ஓய்வூதிய பலன்களை சரியாக கணக்கிட்டு வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி, பிச்சையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "மனுதாரர் பணி நீக்கம் செய்யப்பட்டு, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மனுதாரரின் கோரிக்கை பணிப்பதிவேடு அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைக்குரிய வழக்குகளில் நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வுகாண உரிய அதிகாரிகள், உரிய அமைப்புகள் உள்ள நிலையில். நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். மேல்முறையீடு, சீராய்வு, மறு சீராய்வு என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நேரடியாக நீதிமன்றம் வருகின்றனர். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திய பிறகே நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எனவே, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம்"என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Embed widget