மேலும் அறிய

பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் அனுமதி சீட்டில் பல லட்சம் ஊழல் - இந்து முன்னனியினர் புகார்

பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்தல், தரிசனத்திற்கு கொடுக்கப்படும் அனுமதி சீட்டில் பல லட்சம் ஊழல் நடப்பதாக இந்து முன்னனியினர் புகார்.

பழனி கோவிலுக்கு உட்பட்ட முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் புதிய வகை சீட்டு வழங்கபடுவதில் பெண்கள் மொட்டை அடித்தால் தரிசனத்திற்கு அனுமதி வழங்கபடும் நிலையில் கோவில் சூப்பிரண்டு உதவியுடன் பல லட்சம் ஊழல் நடப்பதாக கூறி இந்து முன்னணியினர் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் அனுமதி சீட்டில் பல லட்சம் ஊழல் - இந்து முன்னனியினர் புகார்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கைகளை செலுத்திவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் பழனி கோவிலுக்கு உட்பட்ட சரவண பொய்கை, சண்முக நதி ,ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம் , தண்டபாணி நிலைய முடி இறக்கும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது அப்போது முதல் முடி காணிக்கை சீட்டுக்கு கட்டணம் செலுத்தாமல் பக்தர்கள் முடிகாணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.


பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் அனுமதி சீட்டில் பல லட்சம் ஊழல் - இந்து முன்னனியினர் புகார்

தற்போது முடி காணிக்கை சீட்டு வழங்கும் பணியை மெருகூட்டுவதற்காக புதிய நடைமுறையை கோவில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பக்தர்களின் போட்டோவுடன் இணைத்து ஆன்லைன் மூலமாக முடி காணிக்கை சீட்டு வழங்கபட்டு பின்னர் முடி காணிக்கை செலுத்தப்பட்டு மீண்டும் இந்த சீட்டை கோவில் நிர்வாக டிக்கெட் வழங்கும் இடத்தில் கொடுத்து முடி எடுத்தவரின் போட்டோவுடன் சீட்டு வழங்கப்படுகிறது, இந்த நடைமுறைக்கு நீண்ட நேரம் தாமதமாவதால் தங்களுக்கு வேலை செய்ய நேரம் போதவில்லை என்றும் பழைய முறை சீட்டு வழங்க வேண்டும் என ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் புதிய வகை சீட்டு மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளரான பாலன் என்பவர் முடி காணிக்கை செலுத்துவதற்காக சரவணப் பொய்கை முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு வந்து முடி காணிக்கை சீட்டு வாங்கி முடி காணிக்கை எடுத்துள்ளார், பின்னர் முடி காணிக்கை செலுத்தி விட்டு மீண்டும் அந்த சீட்டில் முடி காணிக்கை எடுத்தவரின் புகைப்படத்துடன் சீட்டு வழங்கப்பட்டுள்ளது,


பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் அனுமதி சீட்டில் பல லட்சம் ஊழல் - இந்து முன்னனியினர் புகார்

அதில் முடி எடுத்தவர் படத்திற்கு பதிலாக வேறொருவரின் படம் இருந்ததால் குழப்பமடைந்தார். இதுகுறித்து கோவில் சூப்பிரண்டு கேட்டபோது இங்கு இப்படி தான் என்றும் பேசியதாக தெரிகிறது. மேலும்  பெண்களுக்கு முடி காணிக்கை எடுத்தால் பழனி கோவிலில் தரிசனம் மூன்று பேர் இலவசமாக செய்து கொள்ளலாம், ஆனால் சூப்பிரண்டுகள் உதவியுடன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்  டிக்கெட் மட்டும்  எடுத்துக்கொண்டு தனியார் முடி எடுக்கும் இடங்களில் பெண்கள் மொட்டைக்கு இலவசம் என்று போலி கைடுகள் அழைப்பதை நம்பி செல்லும் பெண் பக்தர்கள் மொட்டை அடிப்பதால் பெண்கள் முடி ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் என்றும் இதில் கோவில் அதிகாரிகளுக்கு பங்கு செல்கிறது என்றும் இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடப்பதாக கூறியுள்ள சம்பவம் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் பழைய முறை சீட்டுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget