மேலும் அறிய

புயல் எதிரொலி : முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! கும்பக்கரை அருவியில் தடை!

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் தாக்கத்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியிலும் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது.


புயல் எதிரொலி : முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! கும்பக்கரை அருவியில் தடை!

இதனால், கடந்த திங்கள்கிழமை அணைக்கு வினாடிக்கு 5,135 கன அடி அளவுக்கு நீா்வரத்து அதிகரித்து. பின்னா், மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து சனிக்கிழமை  நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது. தற்போது இன்று அணையின் நீா் மட்டம் 140 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயம், குடிநீருக்காக வினாடிக்கு 1,600 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏற்கனவே நிரம்பி வழியும் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், 278 கன அடி உபரி நீர் வெளியேறுவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 126.28 அடி உயரத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த மாதம் சோத்துப்பாறை அணை அதன் முழுக்கொள்ளவை எட்டி உபரிநீர் வெளியேறியது. 


புயல் எதிரொலி : முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! கும்பக்கரை அருவியில் தடை!

இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்வரத்து 20 அடிக்கும் கீழ் குறைந்ததால் உபரிநீர் அளவும் குறையத் தொடங்கியது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக இன்று சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 278 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் முழுவதும் உபரிநீராக வராக நதியில் வெளியேறுவதால் பெரியகுளம் சுற்று வட்டார பாசனக் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் பாசனப் பரப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்  பெய்த மழையால்  கும்பக்கரை அருவியில் திடீரென  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதைத்து வனத்துறை அறிவித்துள்ளனர். 


புயல் எதிரொலி : முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! கும்பக்கரை அருவியில் தடை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில்  பெய்த கனமழையால் இன்று காலை திடீரென அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கும்பக்கரை அருவி நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகளின்  கும்பக்கரை அருவியில் குளிக்கவும்,  அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும்  வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  மேலும்  கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget