மேலும் அறிய

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2019ம் ஆண்டின் அறிவிப்பின் படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள கோரிய வழக்கு.

2019ம் ஆண்டின் அறிவிப்பின்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள கோரிய வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
தஞ்சையைச் சேர்ந்த முருகானந்தம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் டிஆர்பி சார்பில் வெளியானது.
 
ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை.  தற்போது, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதில், கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்தும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கியும், தேர்வின் மூலம் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
 
50 வயது வரையுள்ள பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். ஆனால், எங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தேர்வு மூலம் தேர்வு செய்வது எங்களை பாதிக்கும். 
 
எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2019ம் ஆண்டின் அறிவிப்பின் படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதி, இந்த வழக்கின் முடிவு நீதிமன்றத்தின் இறுதி உத்தரவிற்கு உட்பட்டது. மேலும் வழக்கு குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
 
 

மற்றொரு வழக்கு

 
தல்லாகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ அலுவலகம், மதுரை மாநகராட்சி மற்றும் பிற அரசு அலுவலகங்களை அகற்ற கோரி 2016ல் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மேலூரைச் கோபாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016ல் தாக்கல் செய்த மனு.
அதில், "மதுரை நகரின் முக்கிய நீராதாரமாக தல்லாகுளம் கண்மாய் உள்ளது. 52 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கண்மாயில் வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ மற்றும் மாநகராட்சி அலுவலகம் என படிப்படியாக அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. மேலும் தல்லாகுளம் கண்மாய் பகுதியில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலக தமிழ் சங்கத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
 
நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியாக தல்லாகுளம் கண்மாய் அறிவிக்கப்படவில்லை. எனவே, தல்லாகுளம் கண்மாயில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்றிவிட்டு, பழைய நிலைக்கு கொண்டு வரவும், புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில்,
 
* நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது என்பதில் இருவேறு கருத்து இல்லை. 
 
* 50 ஆண்டுக்கும் மேலாக பல கட்டிடங்கள் உள்ளன. இதில், அரசு அலுவலகங்களும் உள்ளன. 
 
* தற்போதைய நிலையில் கண்மாயை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. 
 
* இனிமேல் தற்போதுள்ள கட்டிடங்கள் தவிர்த்து. இனி எந்தவிதமான ஆக்கிரமிப்பிற்கும் நிலம் எடுக்கப்படாது என அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
எனவே, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால் இந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
ABP Premium

வீடியோ

BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
INDIAN CRICKET: பெங்களூரில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்! இளம் வீரர்களை உருவாக்கும் பிசிசிஐ திட்டம்!
INDIAN CRICKET: பெங்களூரில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்! இளம் வீரர்களை உருவாக்கும் பிசிசிஐ திட்டம்!
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்: குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு குழப்பம்! புதிய தேதிகள் அறிவிப்பு!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்: குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு குழப்பம்! புதிய தேதிகள் அறிவிப்பு!
”பெண்கள் பாதுகாப்பு வெறும் விளம்பரம்” - திமுக மீது நடிகை கஸ்தூரி கடும் தாக்கு...
”பெண்கள் பாதுகாப்பு வெறும் விளம்பரம்” - திமுக மீது நடிகை கஸ்தூரி கடும் தாக்கு...
Embed widget