மேலும் அறிய

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2019ம் ஆண்டின் அறிவிப்பின் படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள கோரிய வழக்கு.

2019ம் ஆண்டின் அறிவிப்பின்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள கோரிய வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
தஞ்சையைச் சேர்ந்த முருகானந்தம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் டிஆர்பி சார்பில் வெளியானது.
 
ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை.  தற்போது, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதில், கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்தும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கியும், தேர்வின் மூலம் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
 
50 வயது வரையுள்ள பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். ஆனால், எங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தேர்வு மூலம் தேர்வு செய்வது எங்களை பாதிக்கும். 
 
எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2019ம் ஆண்டின் அறிவிப்பின் படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதி, இந்த வழக்கின் முடிவு நீதிமன்றத்தின் இறுதி உத்தரவிற்கு உட்பட்டது. மேலும் வழக்கு குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
 
 

மற்றொரு வழக்கு

 
தல்லாகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ அலுவலகம், மதுரை மாநகராட்சி மற்றும் பிற அரசு அலுவலகங்களை அகற்ற கோரி 2016ல் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மேலூரைச் கோபாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016ல் தாக்கல் செய்த மனு.
அதில், "மதுரை நகரின் முக்கிய நீராதாரமாக தல்லாகுளம் கண்மாய் உள்ளது. 52 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கண்மாயில் வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ மற்றும் மாநகராட்சி அலுவலகம் என படிப்படியாக அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. மேலும் தல்லாகுளம் கண்மாய் பகுதியில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலக தமிழ் சங்கத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
 
நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியாக தல்லாகுளம் கண்மாய் அறிவிக்கப்படவில்லை. எனவே, தல்லாகுளம் கண்மாயில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்றிவிட்டு, பழைய நிலைக்கு கொண்டு வரவும், புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில்,
 
* நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது என்பதில் இருவேறு கருத்து இல்லை. 
 
* 50 ஆண்டுக்கும் மேலாக பல கட்டிடங்கள் உள்ளன. இதில், அரசு அலுவலகங்களும் உள்ளன. 
 
* தற்போதைய நிலையில் கண்மாயை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. 
 
* இனிமேல் தற்போதுள்ள கட்டிடங்கள் தவிர்த்து. இனி எந்தவிதமான ஆக்கிரமிப்பிற்கும் நிலம் எடுக்கப்படாது என அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
எனவே, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால் இந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாவை விளக்காய் ஒரு தாய்க்கிழவி... 112 வருடங்களாக ஒளி வீசும் ரகசியம் குறித்து தெரியுமா?
பாவை விளக்காய் ஒரு தாய்க்கிழவி... 112 வருடங்களாக ஒளி வீசும் ரகசியம் குறித்து தெரியுமா?
அதிமுக குறித்து யார் யார் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை - செல்லூர் ராஜு பேட்டி !
அதிமுக குறித்து யார் யார் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை - செல்லூர் ராஜு பேட்டி !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
Embed widget