மேலும் அறிய

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் 3 பேர் முன்ஜாமின் கோரிய வழக்கு.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவத்தில், மூன்று நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மரணம் அடைந்தார். அவர் உடல் விமான மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது  அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தொண்டர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வெளியே நின்றனர். வீரருக்கு மரியாதை செலுத்தி விட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில்  வந்த போது பாஜக தொண்டர்கள் அமைச்சர் காரின் மீது காலணி வீசினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய மூவரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என மூன்று பேரும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மூன்று நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும். என நிபந்தனை விதித்து மூன்று நபர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 


மற்றொரு வழக்கு

நெல்லை கோவிலம்மாள்புரத்தில் பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரிய மனுவை  நிராகரித்த நெல்லை ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த சுவாமிதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரிய மனுவை  நெல்லை ஆட்சியர் நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், " மனுதாரர் கூறும் இடத்தில் செல்லையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் 1977 முதல் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிறு மற்றும் விழா நாட்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படாமல் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது.  இந்நிலையில் உறுப்பினர்கள் அதிகமானதால் நெல்லை டயசிஸ் தரப்பில், 21 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அதில் பிரார்த்தனை கூடம் கட்ட திட்டமிடப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் இதற்கான அனுமதியை வழங்கவில்லை.

மனுதாரர் தரப்பில், " மதக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்களில் சிலரே கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும், திட்ட அனுமதி உள்ளிட்ட அனுமதிகளை பஞ்சாயத்திடம் இருந்து முறையாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “மனுதாரர் குறிப்பிடும் கோவிலம்மாள்புரம் கிராமம் ஒரு குக்கிராமம். இங்கு 180 இந்து குடும்பங்களும், 10 கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன. பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் 75 மீட்டர் தொலைவிலும் இரண்டு கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கினால் சட்ட - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பாக அமையும். இதன் காரணமாகவே மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது. ஆகவே மனுதாரர் கூறும் நிவாரணத்தை வழங்க இயலாது எனக் கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
Maruti Victoris CNG Review: Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
Embed widget