மேலும் அறிய

அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு - தேர்தல் ஆணையத்தில் முறையிட மனுதாரருக்கு அறிவுரை

’’ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது  பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருவதாக மனுதாரர் புகார்’’

அதில், "ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள முனியசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோரின் உறவினரான நான் கல்லூரியில் படித்து வந்த பொழுது மாற்று ஜாதியை சேர்ந்த செல்வகுமார் உடன் காதல் செய்ததால் முனியசாமி தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர். செல்வகுமார் தொடர்பை துண்டிக்க செய்தனர். இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம் இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்தவர் முனியசாமி அவருடைய கட்சி பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு எங்களை மிரட்டி வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதியின் ஜாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது  பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் அவரது மனைவி கிருத்திகா முனியசாமி மற்றும் அவர் சார்ந்திருந்த அதிமுக கட்சி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு - தேர்தல் ஆணையத்தில் முறையிட மனுதாரருக்கு அறிவுரை

தேர்தல் ஆணைய விதிமுறையை  பின்பற்றாமல், ஜாதி பாகுபாடு பார்க்கும் அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்  முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க  வேண்டும். மேலும் அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் பொது நலம் இல்லை. தனி நபர் பாதிப்பு குறித்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற ஒரு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கை அடுத்தவாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மானாமதுரை, கீழப்பசளை, மேலப்பசளை மற்றும் சங்கமங்களம் கிராமத்தில் கால்வாயின் குறுக்கே இரண்டாவது பாலம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது எனக் கோரிய வழக்கு- சிவகங்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 4 வாரத்தில் மனுவினை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மானாமதுரை, கீழப்பசலையை சேர்ந்த சங்கையா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், "சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழபசளை, மேலபசளை, சங்கமங்கலம் ஆகிய 3 கிராமங்களிலும் சுமார் 6,500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த பகுதியிலுள்ள ஆதனூர் மதகு அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் ஒரு பாலம் கட்ட கோரி விண்ணப்பித்தார். இவருக்கு பொதுப்பணித்துறை சார்பில் விதிமுறைகளுடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.  


அந்தப் பாலத்தின் வழியாக தற்போது  விவசாய நிலங்களுக்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக, பாசன கால்வாயில் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகேயே 100 மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரியுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், எங்கள் பகுதியில் உள்ள பாசன கால்வாயை தூர்வாருவதற்கு இயலாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 


எனவே, ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே மற்றொரு பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கால்வாய் குறுக்கே இரண்டாவது பாலம் அமைத்தால் கால்வாயினை தூர்வார முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து சிவகங்கை  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget