Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 21 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.


மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில், அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்த பொழுது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.























