மேலும் அறிய

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் கதறிய குடும்பம்! நிலத்தகராறில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி!

"காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பட்டா இடத்தில் வீடு கட்டும் கட்டுமான வேலைகளை தடுத்து நிறுத்தியதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய் தலைகாணியுடன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நிலப் பிரச்சனை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன், லட்சுமி தம்பதியினர். இவர்கள் வாசுதேவன், வசந்த் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு சிறியதாக இருந்த நிலையில் அதனை அகற்றி பட்டா இடத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு கட்டுமான வேலைகளை செய்து வந்துள்ளனர். அதில், வீட்டு அருகே கன்னியப்பன் அனுபவத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு கொஞ்சம் இடத்தையும் சேர்ந்து, கன்னியப்பன் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

வீடு கட்டுவதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு 

இந்நிலையில் அதே கிராமத்தில் கன்னியப்பன் வீட்டு பக்கத்து தெருவில் வசித்து வரும் நபர் ஒருவர் அந்த நத்தம் புறம்போக்கு இடம் தங்களுக்கு சொந்தம் என்று, கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வீடு கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியப்பன் வீட்டில் தொழிலாளர்கள் ரூப் ஜல்லி போடும் கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருந்தபோது, எதிர் தரப்பினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் உத்தரவின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோர் கன்னியப்பன் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வருவாய் துறையினர் வீடு கட்டுமான பணிகளை நிறுத்தியதால், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கன்னியப்பன், லட்சுமி, வாசுதேவன் வசந்த் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் முற்றுகையிட்டு, எதிர் தரப்பு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம் 

சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் பாய், தலைகாணி உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இரவு நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, 

தகவல் அறிந்து சார் ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அலுவலகத்திற்கு வருகை தந்து உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டிருந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர். நள்ளிரவில் குடும்பத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ‌

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget