மேலும் அறிய

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் கதறிய குடும்பம்! நிலத்தகராறில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி!

"காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பட்டா இடத்தில் வீடு கட்டும் கட்டுமான வேலைகளை தடுத்து நிறுத்தியதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய் தலைகாணியுடன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நிலப் பிரச்சனை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன், லட்சுமி தம்பதியினர். இவர்கள் வாசுதேவன், வசந்த் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு சிறியதாக இருந்த நிலையில் அதனை அகற்றி பட்டா இடத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு கட்டுமான வேலைகளை செய்து வந்துள்ளனர். அதில், வீட்டு அருகே கன்னியப்பன் அனுபவத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு கொஞ்சம் இடத்தையும் சேர்ந்து, கன்னியப்பன் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

வீடு கட்டுவதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு 

இந்நிலையில் அதே கிராமத்தில் கன்னியப்பன் வீட்டு பக்கத்து தெருவில் வசித்து வரும் நபர் ஒருவர் அந்த நத்தம் புறம்போக்கு இடம் தங்களுக்கு சொந்தம் என்று, கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வீடு கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியப்பன் வீட்டில் தொழிலாளர்கள் ரூப் ஜல்லி போடும் கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருந்தபோது, எதிர் தரப்பினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் உத்தரவின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோர் கன்னியப்பன் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வருவாய் துறையினர் வீடு கட்டுமான பணிகளை நிறுத்தியதால், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கன்னியப்பன், லட்சுமி, வாசுதேவன் வசந்த் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் முற்றுகையிட்டு, எதிர் தரப்பு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம் 

சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் பாய், தலைகாணி உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இரவு நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, 

தகவல் அறிந்து சார் ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அலுவலகத்திற்கு வருகை தந்து உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டிருந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர். நள்ளிரவில் குடும்பத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ‌

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget