“சுந்தரா டிராவல்ஸ்”க்கு டப் கொடுத்த அரசு பேருந்து.. புகை மூட்டமாக மாறிய காஞ்சிபுரம்..!
Kanchipuram News: காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து பழுதானதால், சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவதை போல் புகையை கக்கி சென்றது.

பல்வேறு புகார்கள்
திரைப்பட பாணியில்
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சீர்காழியில் நடந்த சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் வடரங்கத்தில் இருந்து சீர்காழி நோக்கி A8 என்ற கும்பகோணம் அரசு பேருந்து கழகம் சீர்காழி கிளையை சேர்ந்த அரசு பேருந்து, சுமார் 60 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் வலது புற முன் சக்கர திடீரென கழண்டு பேருந்தில் இருந்து தனியாக சாலையில் ஓடி உள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளார்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் உயிர்ச்சேதம் இன்றி தப்பினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் மீண்டும் அரசு பேருந்து, முறையான பராமரிப்பு இல்லாததால் புகையை கக்கிச் செல்வது காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையாக அரசுப் பேருந்துகளை பராமரிக்க வேண்டும், தினமும் பேருந்து பயணத்திற்கு தயாராகும் முன்பு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















