மேலும் அறிய

மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நியாயமாக யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து, 1 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, 1 பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 விவசாய இடுபொருள் மற்றும் விவசாய கருவிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆதார நிதி என பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.


மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., ’’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தருவோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தோம் அதை நிறைவேற்றி காட்டி, இன்று ஒரு கோடிக்கு மேலே பெண்கள் பயன்படக்கூடிய வகையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கிக் கொண்டு இருக்கும் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. சில பெண்களுக்கு இன்னும் அந்த உரிமை தொகை வரவில்லை என்று ஒரு கோரிக்கை இருக்கிறது, நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அது உள்ள சில பிரச்சனைகளை விரைவில் சரி செய்து எல்லா சகோதரிகளுக்கும் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் நிச்சயமாகச் செய்து தருவோம் என்ற உறுதி நாங்கள் இங்கு அளிக்கிறோம்.


மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சரும் தமிழ்நாடு அரசும் செய்துகொண்டு இருக்கிறது, எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி வரும். நாம வரி காட்டுகிறோம் ஒன்றிய அரசாங்கத்திற்கு, ஆனால் நமக்கு வரவேண்டிய சரியாக வரவில்லை என்றாலும், எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி மக்களுக்கான திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கின்ற ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி’’ என்று தெரிவித்தார்.

மக்கள் களம் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ராமசுவாமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget