![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Liquor Price Hike: இனி வெளிநாட்டு மதுபானம், பீருக்கு 10% விலையை உயர்த்தும் அரசு...! எங்கு தெரியுமா?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Liquor Price Hike: இனி வெளிநாட்டு மதுபானம், பீருக்கு 10% விலையை உயர்த்தும் அரசு...! எங்கு தெரியுமா? With the new excise duty policy coming into effect from April 1, prices of foreign liquor and beer in Uttar Pradesh will increase by 10 per cent, it has been reported. Liquor Price Hike: இனி வெளிநாட்டு மதுபானம், பீருக்கு 10% விலையை உயர்த்தும் அரசு...! எங்கு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/97486daf336bcb721395e5e42e98cf681675052794386589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று நேற்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கை 2023-24க்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையின்படி, வெளிநாட்டு மதுபானங்கள், பீர், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையில் மதுபான கடைகளில் கேன்டீன் வசதியை நடத்துவதற்கான கட்டணத்தை தற்போது ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது.
புதிய கொள்கையின் மூலம், வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றின் பிணைக்கப்பட்ட கிடங்கு உரிமங்களுக்கான (BWFL-2A, 2B, 2C) உரிமக் கட்டணம் மற்றும் பாதுகாப்பையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது. முக்கிய கிடங்கின் (master warehouse) பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
"லைசென்ஸ் கட்டணம் அதிகரிப்பு மற்றும் கிடங்கு உரிமங்களுடன் கேண்டீன் வசதியை நடத்துவது மதுபானங்களின் விலை உயர வழிவகுக்கும்" என்று உத்திர பிரதேச மது விற்பனையாளர்கள் நல சங்கத்தின் தேவேஷ் ஜெய்ஸ்வால் கூறினார். "விலைகள் எவ்வளவு உயரும் என்பதை தற்போது கூற இயலாது” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய மதுபானக் கொள்கையில் நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களின் குறைந்தபட்ச உத்தரவாத ஒதுக்கீட்டில் (MGQ) 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், 2022-23ல் 58.32 கோடிக்கு மொத்த லிட்டருக்குப் (bulk litre) பதிலாக 64.15 கோடிக்கு மொத்த லிட்டரை அதாவது 36 சதவீத ஆல்கஹால்-பை-வால்யூம் (ABV) தீவிரம் கொண்ட நாட்டு மது விற்பனையாளர்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க மதுபான லாபி அழுத்தம் கொடுத்தும், தற்போதுள்ள விற்பனை நேரத்தில் அரசு மாற்றம் செய்யவில்லை.
இருப்பினும், "சிறப்பு பண்டிகை நாட்களில்" விற்பனை நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் விதியை கொண்டு வந்துள்ளது. " சிறப்பு பண்டிகை நாட்களில், அரசாங்கத்தின் முன் அனுமதியுடன் விற்பனை நேரத்தை அதிகரிக்கலாம்" என்று புதிய கலால் கொள்கை கூறுகிறது. இந்த " சிறப்பு பண்டிகை நாட்கள்" இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் அல்லது உணவகம் மற்றும் கிளப் பார் உரிமங்களுக்கான உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டு, கவுதம் புத் நகர், லக்னோவின் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதி மற்றும் காஜியாபாத் நகரங்களுக்கு அருகிலுள்ள 5 கி.மீக்குள் நகர்ப்புறம்/ கிராமப்புறம் என பிரித்து ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கப்படுவதாக, பாலிசியில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி ஆவணப்படம் தொடர்பாக வெளியிட்ட வீடியோ.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மதன் கௌரி..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)