மேலும் அறிய

Electoral bonds case: தேர்தல் பத்திரங்கள் வழக்கில் ட்விஸ்ட்! நிம்மதி பெருமூச்சு விட்ட பா.ஜ.க. அரசு - உத்தரவில் இதை கவனிச்சீங்களா?

பல முக்கியமான வழக்குகளில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது.

ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக கருதப்படும் நீதித்துறை மீது கடந்த சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல முக்கியமான வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைபாட்டையே உச்ச நீதிமன்றம் எடுத்ததாக அதன் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முக்கிய வழக்குகள்:

அயோத்தி பாபர் மசூதி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ திருமண அங்கீகாரம் வழங்குவது, எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை பயன்படுத்துவது உள்பட பல வழக்குகளில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் வழக்கின் பின்னணி:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்படும் பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம் பாஜகவுக்கு சென்றதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது. 

இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.

பா.ஜ.க.வுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியதா உச்ச நீதிமன்றம்?

கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, வங்கியிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றன எனக் கூறி, நாளைக்குள் விவரங்களை சமர்ப்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. எஸ்.பி.ஐ. சமர்ப்பிக்கும் விவரங்களை தங்களின் இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவில்தான் சர்ச்சை எழுந்துள்ளது. விவரங்களை வெளியிட சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், யார் கொடுத்த நன்கொடை யாருக்கு சென்றது என்பது குறித்து தகவலை வெளியிட தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின்படி, தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பது பற்றிய தகவலையும், எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றார்கள் என்பது பற்றிய தகவலையும் தனித்தனியே சமர்பிக்க எஸ்.பி.ஐ. வங்கி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், யார் கொடுத்த நன்கொடை எந்த அரசியல் கட்சிக்கு சென்றது என்பது குறித்து தெரியவராது என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பத்திரத்தை வாங்கியது யார்? அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சி எது? யார் அளித்த நன்கொடை யாருக்கு  சென்றது? என்பது பற்றிய தகவலை தேர்தல் பத்திரங்களை விற்ற எஸ்.பி.ஐ வங்கி வெளியிடாத வரை இதில் மர்மமே நீடிக்கும் என மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.                                                         

இதையும் படிக்க: Electoral Bonds case: தேர்தல் பத்திர வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
Embed widget