மேலும் அறிய

Pahalgam Attack: தீவிரவாதிகளை தீரத்துடன் எதிர்கொண்ட முஸ்லிம் இளைஞர் வீர மரணம்; யார் இந்த சையது உசேன்?

Jammu Kashmir News: பஹல்காமில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முயன்று வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர் சையது உசேன் அதில் ஷா குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப். 22) மாலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதால் இதில் மனைவி கண் முன்னாலேயே ஏராளமான கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தாக்குதலில் தப்பித்தவர்களும் அவர்களின் உறவினர்களும், கொல்வதற்கு முன்பு நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியதாகக் கூறினர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆண்களுமே குறிவைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர்

இந்த நிலையில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முயன்று வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர் சையது உசேன் அதில் ஷா குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை ஓட்டி சையது உசேன். அவர் நேற்று வழக்கம்போல பணிக்குச் சென்றுள்ளார். பஹல்காம் பகுதியில் இருந்து பைசரன் பள்ளத்தாக்குக்குக் குதிரை மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது இவரின் வழக்கம்.

தாக்குதலைத் தடுக்க முயன்ற சையது உசேன்

நேற்று யாரும் எதிர்பாராத சூழலில், பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது தாக்குதல்காரர்களிடம், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று சையது உசேன் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவரைத் தடுக்கவும் முயன்றுள்ளார்.

இதில் கோபமடைந்த தீவிரவாதிகள், சையது உசேனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சையது உசேன் வீர மரணமடைந்தார். காஷ்மீர் விருந்தினர்களைக் காப்பற்ற முயன்ற ஒரே காரணத்துக்காக, உள்ளூர் இளைஞரான சையது உசேன் கொல்லப்பட்டார். இவருடன் மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர்

மரணமடைந்த இளைஞர் சையது உசேன் அதில் ஷாதான் குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த ஒரே நபர் ஆவார். வயதான தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எல்லோரும் இப்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து சையது உசேனின் தந்தை, சையது ஹைதர் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ’’நேற்று எனது மகன் வழக்கம்போல் வேலையாக பஹல்காம் சென்றிருந்தான். 3 மணி வாக்கில் தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டோம். அவனுக்கு அழைத்தோம். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 4.40 மணி வாக்கில், போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.

மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும்

உடனே காவல் நிலையம் சென்றோம். அங்குதான் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தோம். என் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget