மேலும் அறிய

Manipur Issue: அதென்ன 267வது விதி..! மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 267வது விதிப்படி (Parliament 267 Rule) விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த விதி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 267வது விதிப்படி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த விதி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

பற்றி எரியும் மணிப்பூர்:

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக மாறி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

முடங்கிய நாடாளுமன்றம்:

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பேச தயார் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு அவைகளிலும் விளக்க அளிப்பார் எனவும் மத்திய அரசு  தெரிவித்து வருகிறது. அதேநேரம், மத்திய அரசு சொல்லும் குறுகிய விவாதம் வேண்டாம் எனவும்,  267வது விதிப்படி விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பியுஷ் கோயல் விளக்கம்:

இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முறையான முறையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் தற்போது விதி 267ன் கீழ் தான் விவாதிக்க வேண்டும் என கோர்க்கையை மாற்றியுள்ளனர். வேறு எந்த பிரச்னையும் இல்லாத சூழலில் தான் இந்த விதியின் கீழ் விவாதம் நடத்தப்படும். ஆனால், தற்போது கூட்டத்தொடர் 7 நாட்கள் தொடங்கி விட்டது. அரிதினும் அரிதான சம்பவங்கள் மட்டுமே, 267வது விதியின் கீழ் விவாதிக்கப்படும்” எனவும்  விளக்கமளித்தார்.

267வது விதி:

நாடாளுமன்றத்தின் விதி 267வது என்பது மாநிலங்களவைக்கு பொருந்தக்கூடியது. மாநிலங்களவை தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் இந்த விதியின் கீழ், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அனைத்து விவாதங்களையும் நிறுத்தி வைத்து விட்டு, குறிப்பிட்ட விவகாரத்தின் முக்கியத்துவத்தின் அடிப்பட்டையில் நீண்ட நேரத்திற்கு விவாதிக்க முடியும். அதன்படி, மாநிலங்களவையில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான தங்களது கருத்துகளை பதிவிடலாம். ஆனால், குறுகிய கால விவாதத்தின் போது அனைத்து கட்சிகளுக்கும் கருத்து கூறும் வாய்ப்பு கிடைக்காது. அதனால், தான் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் 267வது விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.

விதி 267-ஐ எப்படி பயன்படுத்தலாம்?

உறுப்பினர்கள் அவசரப் பிரச்சினைகளை எழுப்ப விரும்பும் மற்றும் பொதுவான நடைமுறைகள் மூலம் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலைகளில் விதி 267 பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியின் மூலம் அன்றைய நாளில் விவாதிக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்த அனைத்தையும் ஒத்திவைக்கலாம். இந்த நோட்டீசுற்கு அனுமதி வழங்க, மாநிலங்களவை தலைவரான துணைக்குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சபையின் எந்தவொரு உறுப்பினரும் விதி 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாம்.

2016ம் ஆண்டிற்குப் பிறகு..!

ஆனால், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 267வது விதியின் கீழ் விரிவாக விவாதிக்க வேண்டும் என எத்தனையோ முறை எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், ஒருமுறை கூட அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு தொடர்பாக தான், 267வது விதியின் கீழ் விரிவாக விவாதிக்க அப்போதைய துணைக் குடியரது தலைவர் ஹமித் அன்சார் ஒப்புதல் அளித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget