மேலும் அறிய

UP Ayodhya Panchayat Election 2021: இந்து பெரும்பான்மை கொண்ட உ.பி கிராம தேர்தலில் வென்ற இஸ்லாமியர்..

உத்தரப் பிரதேச மாநிலம் ருடாலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரஜான்பூர் கிராமத் தலைவர் தேர்தல் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

உத்தரப் பிரதேச மாநிலம் ருடாலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ரஜான்பூர். இந்தக் கிராமத்தின் தலைவராக ஹபீஸ் அசிமுதீன் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாகவே பஞ்சாயத்து தேர்தல் அந்தந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவே உள்ளது. இதன் முடிவுகளின் தாக்கம் அடுத்த சில வருடங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யின் பஞ்சாயத்துத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இன்றளவும் உபியின் நகர்ப்புறக் கட்சியாகவே பாஜக கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் தனது எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்டோரின் செல்வாக்கை வீழ்த்த பாஜக கடும் பிரயத்தனம் செய்தது.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மே 4ம் தேதி நடைபெற்றன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 3,050 பஞ்சாயத்து வார்டுகளில், 790 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி. பாஜக 719 இடங்களையும், பகுஜன் சமாஜ் 381 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மற்றவர்கள் 1,114 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
 
இந்நிலையில்,  உத்தரப் பிரதேச மாநிலம் ருடாலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரஜான்பூர் கிராமத் தலைவர் தேர்தல் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
UP Ayodhya Panchayat Election 2021: இந்து பெரும்பான்மை கொண்ட உ.பி கிராம தேர்தலில் வென்ற இஸ்லாமியர்..
 
ரஜான்பூர் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் 8 பேர் களம் கண்டனர். இவர்களில், ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். ஒற்றை இஸ்லாமிய வேட்பாளராகக் களமிறங்கிய ஹபீஸ் அசிமுதீன் கான் தலைவராகவும் ஆகிவிட்டார். ஹபீஸின் குடும்பம்தான் ரஜான்பூர் கிராமத்தின் ஒரே இஸ்லாமியக் குடும்பம். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் களத்தில், சக வேட்பாளர்கள் பென்ஷன், பிரதமரின் வீட்டு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் பட்டா எனப் பற்பல கண்கவர் வாக்குறுதிகளை வழங்கினர்.
 
இருந்தாலும் ரஜான்பூர் கிராமத்தினர் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு ஹபீஸ் தான் தங்களின் தலைவர் என்பதில் உறுதியாக இருந்து வாக்களித்துள்ளனர். கிராமத் தலைவராகிவிட்ட அசிமுதீன், "அனைத்து நிதியும் கிராமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே மடைமாற்றப்படும். கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்" எனக் கூறியிருக்கிறார்.
தங்களின் விருப்பம்போல் ஹபீஸ் கிராமத் தலைவராகிவிட்டது குறித்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ராதே ஷ்யாம் (53) கூறியபோது, அசிமுதீனின் வெற்றிக்கு இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. அசிமுதீன் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நாளே அவருக்குத் தான் எங்களின் வாக்கு என்பதை நாங்கள் உறுதி செய்துவிட்டோம் என்றார்.
 
சம்பத் லால் (61) கூறுகையில், "அசிமுதீனின் வெற்றி இங்கே எங்களின் கிராமத்தில் சாதி, மத சர்ச்சைகள் இல்லை என்பதற்கான சான்று. இங்கே வாக்கு கேட்டுவந்த இந்து வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் சாதியைச் சொல்லியே வாக்கு கேட்டனர். அசிமுதீனைத் தவிர வேறு யார் வெற்றி பெற்றிருந்தாலும் கசப்புணர்வே ஏற்பட்டிருக்கும்" என்றார். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால், மாநில அரசு கிராமத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாக்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Embed widget