மேலும் அறிய

உ.பி. ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்: தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா?

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திங்கள்கிழமை அன்று நிகழ்ந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது 45 வயது பெண்ணும் அவரது 20 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது 45 வயது பெண்ணும் அவரது 20 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

பெண்கள் உள்ளே இருக்கும் போது அவர்களது குடிசைக்கு போலீசார் தீ வைத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இருவரும் தீக்குளித்ததாக உள்ளூர் போலீசார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக மாநில போலீசார் தற்போது 13 பேர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மற்றும் புல்டோசர் ஆபரேட்டர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் ரூரா பகுதியில் உள்ள மடௌலி கிராமத்தில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அதிகாரிகள் புல்டோசருடன் காலையில் வந்ததாகவும், தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் கூறினர்.

"மக்கள் உள்ளே இருக்கும்போதே தீ மூட்டினார்கள். எங்களால் தப்பிக்க முடிந்தது. எங்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள். ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை. மாவட்ட மாஜிஸ்திரேட் கூட உடன் இல்லை. எல்லோரும் ஓடினர். யாராலும் என் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை" என்று இறந்தவரது மகன் சிவம் தீட்சித் கூறினார். 

தீக்குளித்தவர்களின் பெயர் பிரமிளா மற்றும் நேஹா என உள்ளூர் போலீசார் நேற்று கூறினர். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தினேஷ் கெளதம் மற்றும் பிரமிளாவின் கணவர் கெந்தன் லால் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு பெண்ணும் அவரது மகளும் குடிசைக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் விசாரிப்போம் மற்றும் ஏதேனும் தவறு நடந்தால், குற்றவாளிகளை விட்டுவிட மாட்டோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிபிஜிடிஎஸ் மூர்த்தி கூறினார்.

மேலும் "எப்போது ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தாலும், அது குறித்து வீடியோ எடுக்கப்படும். நாங்கள் இதுதொடர்பான வீடியோவைக் கேட்டுள்ளோம். அதை விசாரிக்க உள்ளோம்" என்று மூர்த்தி கூறினார்.


உ.பி. ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்: தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா?

இந்த மரணத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. போலீசார் மீது கிராம மக்கள் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கொலைக்கு காரணமான சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஞானேஷ்வர் பிரசாத், லெக்பால் சிங் மற்றும் பிறருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை அல்லது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

கூடுதல் காவல்துறை இயக்குநர் அலோக் சிங், பிரதேச ஆணையர் ராஜ் சேகர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று கூட்டத்தை அமைதிப்படுத்தினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ”இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், நாங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம். பொறுப்பானவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.

 

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget