மேலும் அறிய

உ.பி. ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்: தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா?

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திங்கள்கிழமை அன்று நிகழ்ந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது 45 வயது பெண்ணும் அவரது 20 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது 45 வயது பெண்ணும் அவரது 20 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

பெண்கள் உள்ளே இருக்கும் போது அவர்களது குடிசைக்கு போலீசார் தீ வைத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இருவரும் தீக்குளித்ததாக உள்ளூர் போலீசார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக மாநில போலீசார் தற்போது 13 பேர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மற்றும் புல்டோசர் ஆபரேட்டர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் ரூரா பகுதியில் உள்ள மடௌலி கிராமத்தில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அதிகாரிகள் புல்டோசருடன் காலையில் வந்ததாகவும், தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் கூறினர்.

"மக்கள் உள்ளே இருக்கும்போதே தீ மூட்டினார்கள். எங்களால் தப்பிக்க முடிந்தது. எங்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள். ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை. மாவட்ட மாஜிஸ்திரேட் கூட உடன் இல்லை. எல்லோரும் ஓடினர். யாராலும் என் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை" என்று இறந்தவரது மகன் சிவம் தீட்சித் கூறினார். 

தீக்குளித்தவர்களின் பெயர் பிரமிளா மற்றும் நேஹா என உள்ளூர் போலீசார் நேற்று கூறினர். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தினேஷ் கெளதம் மற்றும் பிரமிளாவின் கணவர் கெந்தன் லால் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு பெண்ணும் அவரது மகளும் குடிசைக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் விசாரிப்போம் மற்றும் ஏதேனும் தவறு நடந்தால், குற்றவாளிகளை விட்டுவிட மாட்டோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிபிஜிடிஎஸ் மூர்த்தி கூறினார்.

மேலும் "எப்போது ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தாலும், அது குறித்து வீடியோ எடுக்கப்படும். நாங்கள் இதுதொடர்பான வீடியோவைக் கேட்டுள்ளோம். அதை விசாரிக்க உள்ளோம்" என்று மூர்த்தி கூறினார்.


உ.பி. ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்: தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா?

இந்த மரணத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. போலீசார் மீது கிராம மக்கள் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கொலைக்கு காரணமான சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஞானேஷ்வர் பிரசாத், லெக்பால் சிங் மற்றும் பிறருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை அல்லது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

கூடுதல் காவல்துறை இயக்குநர் அலோக் சிங், பிரதேச ஆணையர் ராஜ் சேகர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று கூட்டத்தை அமைதிப்படுத்தினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ”இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், நாங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம். பொறுப்பானவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Gold Rate 12th May: ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Gold Rate 12th May: ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
Rameswaram Train Timing: ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்
ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்
TNGASA 2025: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அடேங்கப்பா! மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம்! எது தெரியுமா?
அடேங்கப்பா! மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம்! எது தெரியுமா?
சர்ச்சையில் சிக்கிய நடிகர் சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை?
சர்ச்சையில் சிக்கிய நடிகர் சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை?
Embed widget