மேலும் அறிய

மோடியை ஆதரித்ததால் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த ஆண்.. தீவிர விசாரணையில் வழக்கு..

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார். இதை போலீசார் உறுதி செய்துள்ளனர். 

பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு வாக்களித்ததால், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை துன்புறுத்தியதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண், மார்ச் 3ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும், போலீசார் இப்போதுதான் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் மொராதாபாத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும்படி கணவர் கூறியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஷனா இராம் என்ற பாதிக்கப்பட்ட பெண், மொராதாபாத்தில் உள்ள பீர்சாடாவில் வசிக்கும் முகமது நதீமை 2019 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால், திருமணமான சில நாட்களிலேயே தனது மைத்துனர் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் படோரியா கூறுகையில், "கணவனின் சகோதர சகோதரிகள் துன்புறுத்தியதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்திய தண்டனை சட்டம், 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க கோட்வாலி காவல் நிலைய காவல்துறையினருக்கு மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த காரணத்தால் மனைவிக்கு கணவர் விவாகரத்து அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget