மேலும் அறிய

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கடிதத்தில் வெளியான தகவல்

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரைஃபிளால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் வசித்துவந்த வாடகை வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரைஃபிளால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் வசித்துவந்த வாடகை வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விவேக் வர்மா என்ற அந்த நபருக்கு வயது 23. இவர் 2020 ஆம் ஆண்டு தான்  இவர் கான்ஸ்டபிளாக இணைந்தார். இவர்  லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்தவர். போலீஸ் லைனில் பணியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேஷவ் குமார் தெரிவித்தார்.
 விவேக் வர்மா தேஹத் காவல் சரகத்துக்கு உட்பட்ட சோட்டா துஷா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமை அவருக்கு பணி நாள். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. சக பணியாளர்கள் அவர் செல்போனை தொடர்பு கொண்டபோதும் அவர் அதை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது வீட்டுக்கு போலீஸார் அனுப்பிவைக்கப்பட்டனர். 

அவரது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. வீட்டிற்குச் சென்ற காவலர்கள் வெகு நேரமாக கதவைத் தட்டியும், காலிங் பெல் அடித்தும் கூட அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் விவேக் வர்மா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் உயிரிழந்தது பார்த்தவுடனேயே உறுதியானது. அவர் அருகே எஸ்எல்ஆர் ரைஃபிளும் இருந்தது. கூடவே ஒரு தற்கொலைக் கடிதமும் இருந்தது. அதில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீஸார் அதனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் மேலோங்கினால் நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். தமிழகத்தில் 104 என்ற கட்டணமில்லை தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.

தற்கொலைகள்.. திடுக் புள்ளிவிவரம்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ஆவர். தற்கொலை செய்துகொண்டவர்களில் மாணவிகள்(5,693 பேர்) மற்றும் தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள்(4,246 பேர்) ஆகியோர் அடங்குவர். அதிலும், பெரும்பாலான இல்லத்தரசிகள் தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது(3,221 பேர்) என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம்(3,055 பேர்) மற்றும் மராட்டியம்(2,861 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் 13.9 சதவீதம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது, 13.2 சதவீதம் மத்தியப் பிரதேசம் மற்றும் 12.3 சதவீதம் மராட்டியத்தில் பதிவாகியுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் (1,64,033 பேரில் 1,09,749 பேர்) திருமணமானவர்கள் என்பதும் 24.0 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள் (39,421 பேர்) ஆவர். 2021 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலை செய்துகொண்டவர்களில் விதவை 1.5 சதவீதம் (2,485 பேர்), விவாகரத்து பெற்றவர்கள் 0.5 சதவீதம் (788 பேர்) மற்றும் பிரிந்து தனியே வாழ்ந்தவர்கள் 0.5 சதவீதம் (871 பேர்) ஆவர். பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் - திருமணம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள்) மற்றும் கருவுறுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில், 18 - 30 வயதுக்குட்பட்டவர்கள்( 34.5 சதவீதம் பேர்) மற்றும் 30 - 45 வயதுக்குட்பட்டவர்கள்(31.7 சதவீதம் பேர்) ஆவர்.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
Embed widget