மேலும் அறிய

கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

முல்லை பெரியாறு அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை பெரியாறு அணை என்பது கேரளா மாநிலம் மற்றும் பயன் அடையவில்லை தமிழ்நாட்டின் பல பகுதியின் விவசாயத்திற்கு, குடிநீருக்கும் பயன்படுகிறது. குறிப்பாக 2 மாநிலத்திற்கு நீராதாரமாக விளங்கக்கூடிய அணையாகும்.

இந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒவ்வொரு மழை பெய்யும் காலங்களில் கேரளாவில் பொய்யான பிரச்சாரங்கள் செய்யபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. இதனால், கேரள மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, உடனடியாக அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு பிரச்சாரங்களில் கேரளாவில் உள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சமூக வலைதளங்களில் கூக்குரல் இட்டு வருகின்றனர். 

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை. தொடர்ந்து  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்தும் வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து, முல்லை பெரியாறு அணை நீர்வரத்து அதிகரித்தவுடன், அங்குள்ள மக்களை பயமுறுத்தும் விதமாக, சில அமைப்புகள் முல்லை பெரியாறு அணை இடிய போகிறது என்று சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் முடிச்சு போட்டு,  கேரளா சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அமைச்சரவையிலும் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வாதங்கள் முன்வைத்து பேசப்பட்டு வருகிறது.

இதனை தமிழக விவசாய சங்கங்கள் முற்றிலுமாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் தெரிவித்திருந்த போதிலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக கூறி வதந்திகள் பரப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இடுக்கியில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும், புதிய அணை கட்டுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்பு  கேரளா அமைச்சர் அகஸ்டின் கூறுகையில்..  முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை ஆபத்தில் இருப்பதாகவும், உடையப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது இது முற்றிலும்  தவறு என்றார்.


கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி நேற்று பேசுகையில்.. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுப்பிய பதிவை பேஸ்புக்கில் பார்த்தேன். அணை உடையுமா அல்லது உடையாதா? என்ற கேள்வி என்னுடைய இதயத்தில் ஒலித்து கொண்டேயிருக்கிறது. ஒருவேளை அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். நீதிமன்றங்கள் பதில் அளிக்குமா? நீதிமன்றங்களில் உத்தரவை பெற்று வருபவர்கள் அணை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற முடிவை தெரிவிப்பார்களா. அவர்களுடைய செயல்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget