மேலும் அறிய

Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

`பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், எல்லா திருமணங்களையும் வன்முறையாக சித்தரிப்பதை ஏற்க முடியாது’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

`பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், எல்லா திருமணங்களையும் வன்முறையாகவும், அனைத்து ஆண்களையும் வன்கொடுமை குற்றவாளிகளாகவும் சித்தரிப்பதை ஏற்க முடியாது’ என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து குற்றச் சட்டம் உருவாக்குவது பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

`இந்த நாட்டின் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறையானதாகவும், ஒவ்வொரு ஆணையும் வன்கொடுமை குற்றவாளியாகவும் கண்டிப்பதை இந்த நாடாளுமன்றத்தில் ஏற்க முடியாது’ என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் எழுப்பிய கேள்வியில், குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளை இணைத்து அதுகுறித்து அரசுக்குத் தெரிந்த தகவல்களைக் கோரியுள்ளார். எனினும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசுவதற்கு மறுத்துள்ளார். 

Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி
பினாய் விஸ்வம்

 

`நாட்டில் சுமார் 30 உதவி மையங்கள் இயங்கி 66 லட்சம் பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளன. நாட்டில் சுமார் 703 ஒன் ஸ்டாப் செண்டர்கள் மூலமாக 5 லட்சம் பெண்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பிற்கு நம் நாட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Brut India (@brut.india)

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி பினாய் விஸ்வம் தொடர்ந்து ஸ்மிருதி இரானி பேசுவது அவையைத் தவறாக வழிநடத்துவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் விவகாரத்தை சுருக்குவதாகவும், நாடு முழுவதும் இந்தக் குற்றத்தால் பாதிக்கப்படும் எண்ணற்ற பெண்களை இழிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், ஹரி ஷங்கர் ஆகியோர் 2015ஆம் ஆண்டு ஆர்.ஐ.டி ஃபவுண்டேஷன் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம், அனைத்து இந்திய ஜனநாயக்ப் பெண்கள் சங்கம், இரு தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மனுவில் திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் குற்றமாகக் கருத வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. 

இந்திய குற்றவியல் சட்டத்தின் 375வது சட்டப்பிரிவின் இரண்டாவது விதிவிலக்காக 15 வயதுக்கு அதிகமான தன் மனைவியுடன் ஆண் பாலியல் உறவு கொள்வதை வன்கொடுமை என ஏற்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
Embed widget