மேலும் அறிய

CAA: “அதெல்லாம் மாநிலங்கள் சொல்ல முடியாது; உரிமையே இல்லை; ஆனால்...” - சிஏஏ சட்டம் குறித்து அமித்ஷா!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்றும், பாஜக தலைமையிலான அரசு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை சிஏஏ சட்டம். அதில், நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம், சிஏஏ திரும்பப் பெறப்படாது.” என தெரிவித்தார். 

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை நீக்குவோம் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சொல்கின்றன என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “ இந்திய கூட்டணிக்கு கூட தெரியும், அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று. சிஏஏ கொண்டு வந்தது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. அதை ரத்து செய்வது சாத்தியமில்லை. நாடு முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதனால் அதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காது.” என்றார். 

சிஏஏ சட்டத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித் ஷா, “ எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றை செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வரலாறு வேறு. பிரதமர் மோடியும், பாஜகவும் சொல்வது கல்லில் செதுக்கப்பட்டதை போன்று உத்தரவாதமானது. மோடி அதையேதான் செய்கிறார். சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக கோடிக்கணக்கான மக்களை அழைத்து வந்து இந்தியாவில் குடியமர்த்தப் போவதாகவும், இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு:

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தன் ஊழல் அம்பலமானதில் இருந்தே, நிதானம் இழந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாது. இந்தியா மீது அவருக்கு இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் வங்கதேச ஊடுருவல்காரர்களை பற்றி பேசவில்லை? ஏன் ரோஹிங்கியாக்களை எதிர்க்கவில்லை” என்றார். 

அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக சிஏஏ -வை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அமித் ஷா, “ சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல்களில் கூட அரசியல் ஆதாயம் இருப்பதாக சொன்னார்கள். இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாதா..? ராகுல் காந்தி, மம்தா, மு.க.ஸ்டாலின் மற்றும் கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன.

2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் சிஏஏ கொண்டு வருவதற்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் கட்சி தனது உறுதிப்பாட்டை அப்பவே கூறியிருந்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அது தாமதமானது. இதையடுத்து நேரம், அரசியல் ஆதாயம், நஷ்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போது, ​​எதிர்க்கட்சிகள் இதன்மூலம் அரசியலைச் செய்து தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க விரும்புகின்றன. அவை தற்போது அம்பலமாகிவிட்டன. நான் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது சிஏஏ என்பது சட்டமே” என்று தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget