மேலும் அறிய

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழும் அபாயமா? பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்தது இதுதான்: அமெரிக்க உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்..!

கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவின் உறவு பெரும் பின்னடைவை சந்தித்தது.

சமீப காலமாக, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயும் இந்திய, சீன நாடுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவின் உறவு பெரும் பின்னடைவை சந்தித்தது.

அண்டை நாடுகளுடன் பதற்ற நிலை:

இந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான், இந்திய - சீன நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள அதிகரித்த பதற்றம் அவர்களுக்கிடையே மோதல் உண்டாவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல் அளித்துள்ளது.

குறிப்பாக, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், பாகிஸ்தானிடம் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு இந்தியா ராணுவ ரீதியாக பதிலளிக்கும் வாய்ப்பு முன்தைய காலத்தை விட தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்:

ஆண்டுக்கு ஒரு முறை, உலக நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க உளவுத்துறை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்யும். அந்த வகையில், இந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தியாவும் சீனாவும் இருதரப்பு எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தங்கள் நாட்டின் எல்லை எதுவரை உள்ளது என்பதை தீர்த்துக் கொண்டாலும், பல 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2020ஆம் ஆண்டு, இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்ட சம்பவத்தால் அவர்களின் உறவில் தொடர்ந்து அவநம்பிக்கை ஏற்படும்.

சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் ராணுவ வலிமையை அதிகரித்ததால் இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையே ஆயுதமேந்திய மோதலின் அபாயத்தை உயர்த்தி இருக்கிறது. இது, அமெரிக்கர்களுக்கும் அமெரக்காவின் நலன்களுக்கும் நேரடியான அச்சுறுத்தலை தந்திருக்கலாம். எனவே, இந்த பிரச்னையில் அமெரிக்க தலையிடுவதற்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்தா?

இந்திய சீன எல்லை பகுதியில் நடக்கும் தொடர்ச்சியான குறைந்த அளவிலான உரசல் போக்கு பெரும் சண்டைக்கு வழி வகுக்கும் என்பது முன்பு நடைபெற்ற மோதல் சம்பவங்களின் மூலம் தெரிய வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு, மே மாதம், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய, சீன நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்ததில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பின்னடைவை சந்தித்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரையில் சீனாவுடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உறவு குறித்து அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய குழுக்களை ஆதரிப்பதில் பாகிஸ்தானுக்கு நீண்ட வரலாறு உண்டு. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா கடந்த காலத்தை விட, பாகிஸ்தானிய அச்சுறுத்தல்களுக்கு ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு அதிகம்" எனத் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget