மேலும் அறிய

விமானம் வேண்டாம்! இந்தியாவில் இருந்து ரயிலிலேயே வெளி நாடு செல்லலாம்.. எப்படி தெரியுமா?

வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு நேரடியாக ரயிலில் பயணம் செய்யலாம். பலருக்கு தெரியாத இந்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலானோரின் மனதில் முதலில் தோன்றுவது விமானம் தான். ஆனால் இந்தியாவில் சில ரயில் நிலையங்களிலிருந்து நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு நேரடியாக ரயிலில் பயணம் செய்யலாம். பலருக்கு தெரியாத இந்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜெய்நகர் ரயில் நிலையம் – நேபாளத்திற்கான முக்கிய இணைப்பு

பீகாரில் உள்ள மதுபனி மாவட்டத்தின் ஜெய்நகர் ரயில் நிலையம், நேபாளத்திற்குச் செல்லும் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இங்கிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் நகருக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.  சோதனைக்குப் பிறகு பயணிகள் நேரடியாக நேபாள ரயிலில் ஏறலாம்.

ரக்சால் சந்திப்பு – நேபாளத்திற்கான முக்கிய நுழைவாயில்

பீகார்–நேபாள எல்லையில் உள்ள ரக்சால் சந்திப்பு நேபாளத்திற்கான முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. இந்தியாவின் பல இடங்களை நேபாளத்துடன் இணைக்கும் ரயில்கள் இங்கு செல்கின்றன. இது நேபாளத்திற்கான மிகப் பெரிய நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது.

பெட்ராபோல் – வங்கதேச இணைப்பின் வரலாற்று நிலையம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பெட்ராபோல் ரயில் நிலையம், இந்தியா–வங்கதேச எல்லையில் இருப்பதைத் தவிர, பிரிட்டிஷ் காலத்திலேயே உருவான முக்கிய ரயில் பாதையாகும்

இங்கிருந்து வங்கதேசத்தின் குல்னாவிற்கு ரயில் பாதை உள்ளது.பந்தன் எக்ஸ்பிரஸ் இங்கு செல்கிறது. மேலும் பயணிகள் பயணிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அவசியம்.

ராதிகாபூர் நிலையம் – சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான மையம்

மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள ராதிகாபூர் ரயில் நிலையம், இந்தியா–வங்கதேச ரயில் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக செயல்படுகிறது. இது சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை கையாளும் நிலையம். மேலும் இந்த ரயில் நிலையம் எல்லை சோதனைச் சாவடியாகவும் செயல்படுகிறது.

ஹால்டிபாரி – டாக்கா பயணத்திற்கான வழித்தடம்

வங்கதேச எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹால்டிபாரி ரயில் நிலையம், சிஹாலட்டி நிலையம் வழியாக வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் டாக்காவுக்கு ரயிலில் செல்லலாம். வணிகமும் பயணத்திற்கும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடம் இது.

அட்டாரி ரயில் நிலையம் – பாகிஸ்தானுக்கான நுழைவாயில்

பஞ்சாபில் உள்ள அட்டாரி ரயில் நிலையம், இந்தியா–பாகிஸ்தான் ரயில் தடத்தில் மிக முக்கிய மையமாகும். இங்கிருந்து முன்பு சம்‌ஜௌதா எக்ஸ்பிரஸ்  பாகிஸ்தானின் லாகூருக்கு இயக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்குச் செல்லும் முக்கிய நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது.

முனாபாவ் ரயில் நிலையம் 

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள முனாபாவ் ரயில் நிலையம், பாகிஸ்தானின் கோக்ராபர்–கராச்சி வழித்தடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தார் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே  ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிக்க கடுமையான பாதுகாப்பு சோதனைகளும், பாஸ்போர்ட்–விசாவும் அவசியம்.

விமானம் இல்லாமல் வெளிநாட்டு பயணத்தை நினைத்தால் அது வியப்பாகத் தோன்றலாம். ஆனால் இந்தியாவில் இருந்து நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு ரயில் மூலம் செல்லும் வசதிகள் இருப்பது மிகச் சிலருக்கே தெரியும். இந்த நிலையங்கள் இந்தியாவின் சர்வதேச ரயில் இணைப்பை வெளிக்காட்டுகின்றன.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget