மேலும் அறிய

Train Accident: ரயில் விபத்துகளில் அப்பாவி மக்கள் 18 பேர் பலி! பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன செய்யப்போகிறது?

இரண்டு நாட்களில் நடந்த ரயில் விபத்துகளில் 18 அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அடுத்தடுத்த நடந்த ரயில் விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவதும் அதனால் மரணங்கள் நிகழ்வதும்  அதிகரித்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில், தொழில்நுட்பங்கள் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்கான வழிகள் அரசிடம் இல்லையா என்ற கேள்வி ரயில் பயணிகளிடம் எழுந்துள்ளது.

மற்ற வாகன போக்குவரத்தை விட ரயிலில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், டிக்கெட் கட்டணமும் குறைவு என்ற காரணத்தால் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை ரயிலையே தேர்ந்தெடுத்து எடுக்கின்றனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை போக்கும் அளவில் மத்திய அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு கடந்த சில மாதங்களில் நாட்டில் நடந்த ரயில் விபத்துகளையே சுட்டிக்காட்டலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருவள்ளூரில் கச்சா எண்ணெய் கொண்டு வந்த ரயில் தீ விபத்தில் சிக்கியது என்று பல மோசமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர் ரயில் விபத்து

இந்த நிலையில், சத்தீஸ்கரில் பயணிகள் மின்சார ரயில் சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதையில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மின்சார ரயிலின் முதல் பெட்டி அப்படியே மோதிய வேகத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறி நின்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி காண்போரை கதிகலங்க செய்தது.


Train Accident: ரயில் விபத்துகளில் அப்பாவி மக்கள் 18 பேர் பலி! பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன செய்யப்போகிறது?

நேற்று நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலையில், இன்று காலை உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது மேலும் பயணிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தில் உள்ள சுனர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, எதிரே வந்த கல்கா-ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் சிதறி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு புனித நீராட வந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

இரண்டு நாட்களில் நடந்த ரயில் விபத்துகளில் 18 அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே துறையும் அதிகாரிகளும் என்னென்ன முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பதே ரயில் பயணிகளின் கேள்வியாக இருக்கிறது.

 

 

 

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
Embed widget