மேலும் அறிய

Vande Bharat Bidi: என்ன வேலைய்யா பார்த்து வச்சிருக்க? - பீடியால் பீதியான பயணிகள்! நடு வழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

வந்தே பாரத்தில் பயணி ஒருவர் பீடி பிடித்ததால் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பீதி காரணத்தால், ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

வந்தே பாரத்தில் பயணி ஒருவர் பீடி பிடித்ததால் கூடூர் மற்றும் மனுபோலு இடையே ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

வந்தே பாரத் ரயில்:

விரைவான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை படிப்படியாக விரிவாகம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வந்தே பாரத் ரயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது, பாதி வழியில் பழுதாகி நிற்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. இந்நிலையில் தான் பயணி ஒருவர் பீடி பிடித்ததால் வந்தே பாரத் ரயில் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.

பீடி புகைத்த பயணி:

திருப்பதி மற்றும் ஐதராபாத் இடையேயான வந்தேபாரத் ரயில் சேவை வழங்கம்போல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று 20702 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்பட்டப்போது , திருப்பதியில் அங்கீகரிக்கப்படாத பயணி ஒருவர் ஏறியுள்ளார். C-13  பெட்டியில் ஏறிய அவர் திடீரென கழிவறக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு புகைபிடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கழிவறையில் இருந்த தானியங்கி புகை அணைக்கும் கருவி செயல்பாட்டிற்கு வந்து, தீயை அணைக்கும் பொடியை தூவியுள்ளது. 

பதறிய பயணிகள்:

இதனால் C-13 பெட்டியில் இருந்த பயணிகள் பீதியடைந்து, அவசர கால தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் ரயிலின் கார்டிற்கு தகவல் தெரிவித்தனர். ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் தீ விபத்தை உணர்ந்து தீயணைப்பு கருவிகளுடன் உடனடியாக சி-13 கோச்சுக்கு விரைந்தனர். புகையை அணைக்க தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனிடையே, கூடூர் மற்றும் மனுபோலு இடையே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.  அதில் இருந்த பயணிகள் கழிவறையில் சிக்கியிருந்த பயணியைக் காப்பாற்ற வெளியில் இருந்து கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். பெட்டி முழுவதும் புகை சூழ்ந்ததால் பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினர்.

காவலில் பயணி:

மீட்கப்பட்ட அந்த பயணி நெல்லூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் கழிவறையில் அமர்ந்து அவர் புகைபிடித்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக  ரயில்வே சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், ரயில் எண்.20702 திருப்பதி-செகந்திராபாத் வந்தே பாரத் 16.46 மணி முதல் 17.10 மணி வரை மனுபோலுவில் நிறுத்தப்பட்டு இருந்தது. சம்பவம் தொடர்பாக பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை:

ரயில் பயணத்தின் போதும் மற்றும் ரயில் நிலைய வளாகத்திலும் எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.