மேலும் அறிய

Delhi High Court : அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து

வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, குடியரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்ற விதித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்கை பதிவு செய்ய மத்திய அரசு தடை ஏதும் தடை விதிக்கவில்லை எனக் கூறி, கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இருப்பினும், வெறுப்பு பேச்சில் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வெறுப்பு பேச்சில் டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நீதிபதி சந்திர தாரி சிங், "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் மற்றும் மதத் தலைவர்களால் குறிப்பாக மதம், சாதி, பிராந்தியம் அல்லது இனம் தொடர்பான வெறுப்பூட்டும் பேச்சு சகோதரத்துவக் கருத்துக்கு எதிரானது.

இம்மாதிரியான நபர்கள், அரசியலமைப்பு நெறிமுறைகளை முற்றிலுமாக தரைமட்டமாக்குகின்றனர். அரசியலமைப்பின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை இம்மாதிரியான பேச்சுகள் மீறுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு முதல் அவர்களை விலக்கி வைத்து, நாடு கடத்தி, இனப்படுகொலை செய்வது வரை பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு வெறுப்பு பேச்சே தொடக்க புள்ளியாகும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகம் மற்றும் தேசம் மற்றும் இறுதியில் அரசியலமைப்புக்காக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்படுவதை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதி, "வெறுப்பு பேச்சு என்பது எந்த மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக மட்டும் பேசப்படுவிதில்லை. அனைத்து மட்டங்களிலும் "வெறுக்கத்தக்க பேச்சை" திறம்பட கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை பயனற்ற ஒன்றாக மாறாமல் இருப்பதை சட்ட அமலாக்க முகமைகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார். 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget