மேலும் அறிய

Delhi High Court : அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து

வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, குடியரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்ற விதித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்கை பதிவு செய்ய மத்திய அரசு தடை ஏதும் தடை விதிக்கவில்லை எனக் கூறி, கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இருப்பினும், வெறுப்பு பேச்சில் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வெறுப்பு பேச்சில் டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நீதிபதி சந்திர தாரி சிங், "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் மற்றும் மதத் தலைவர்களால் குறிப்பாக மதம், சாதி, பிராந்தியம் அல்லது இனம் தொடர்பான வெறுப்பூட்டும் பேச்சு சகோதரத்துவக் கருத்துக்கு எதிரானது.

இம்மாதிரியான நபர்கள், அரசியலமைப்பு நெறிமுறைகளை முற்றிலுமாக தரைமட்டமாக்குகின்றனர். அரசியலமைப்பின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை இம்மாதிரியான பேச்சுகள் மீறுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு முதல் அவர்களை விலக்கி வைத்து, நாடு கடத்தி, இனப்படுகொலை செய்வது வரை பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு வெறுப்பு பேச்சே தொடக்க புள்ளியாகும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகம் மற்றும் தேசம் மற்றும் இறுதியில் அரசியலமைப்புக்காக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்படுவதை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதி, "வெறுப்பு பேச்சு என்பது எந்த மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக மட்டும் பேசப்படுவிதில்லை. அனைத்து மட்டங்களிலும் "வெறுக்கத்தக்க பேச்சை" திறம்பட கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை பயனற்ற ஒன்றாக மாறாமல் இருப்பதை சட்ட அமலாக்க முகமைகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Embed widget