மேலும் அறிய

வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் பலனில்லை - குடியரசு துணைத் தலைவர் பேச்சு.!

Vice President Jagdeep Dhankhar: உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

"சகிப்புத்தன்மை என்பது ஒரு நல்லொழுக்கம். இது நமது நாகரிகத்தின் நெறிமுறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது, சமூக நல்லிணக்கத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும்’’ என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்  தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தன்கர் உரை:

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற மகாராஜா அக்ரசென் தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் தன்கர், "சமூக நல்லிணக்கம் இல்லாமல், மற்ற அனைத்தும் பொருத்தமற்றதாகிவிடும். வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பலனில்லை. சமூக நல்லிணக்கம் நமது அணிகலன். இதை நாம் பல நூற்றாண்டுகளாக பார்த்து வருகிறோம்’’ என்று கூறினார்.

உங்கள் பெரியவர்கள், உங்கள் அண்டை வீட்டார், நீங்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடன்  நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்தால், அதை விட ஆனந்தம் இருக்கமுடியாது. சகிப்புத்தன்மையுடன் இருங்கள்; அது எப்போதும் பலனளிக்கும். 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம் என்று அவர்  கூறினார்.


வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் பலனில்லை - குடியரசு துணைத் தலைவர் பேச்சு.!

உரிமை-கடமை:

உரிமைகளுடன் ஒரு குடிமகனாக கடமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை  அவர் வலியுறுத்தினார். நமது உரிமைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு உரிமையும் உங்கள் கடமையால் தகுதி பெறுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் நலன் இருப்பதைப் போலவே, உங்கள் ஒவ்வொரு உரிமையும், உங்கள் அடிப்படை உரிமையும் உங்கள் பொறுப்பால் மீறப்படுகிறது. உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மற்றவர்களின் கருத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், மாற்றுக் கருத்தைக் கேட்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பேசும் நபரும் தங்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்துகிறார். அநேகமாக இளம் சிறுவர்களே, சிறுமிகளே, மற்ற கண்ணோட்டங்களும் செழுமையானதாகவும் சரியானதாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் என அவர் கூறினார்.

மாறுபட்ட கருத்துகள்:

யாராவது தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்போது, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒருபோதும் கட்டாயமில்லை - இல்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களின் கருத்தைக் கேட்காமல், அதைப் பிரதிபலிக்காமல், அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது - இது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி அல்ல. கருத்துக்கள் வேறுபடும், ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் ஆற்றலின் ஒரு வடிவமாகும், இது தனிநபர்களை சரிசெய்ய அனுமதிக்கிறது. வேறு எதுவும் இல்லாவிட்டாலும், அது நாணயத்தின் மறுபக்கத்தை உங்களுக்குக் காட்டுகிறது. எனவே, உங்கள் குரல் நாண்கள் உடனடியாக செயல்படுவதற்கு முன்பு தயவுசெய்து உங்கள் காதுகளை இரவல் கொடுங்கள் என்று  குடியரசு துணைத் தலைவர் தன்கர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget