மேலும் அறிய

Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளியை மர்ம நபர்கள் நாசம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நம் நாட்டு சமையலில் மிக முக்கிய பங்கு வகிப்பது தக்காளி. ஜூன் மாதம் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தக்காளி உட்பட பிற காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விலை கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் உள்ளது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் பல மாநிலங்களில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.


Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

2 ஏக்கர் தக்காளி நாசம்: 

நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக பல மாநிலங்களில் தக்காளி திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சாம்ராஜ் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளியை மர்ம நபர்கள் நாசமாக்கியுள்ளனர்.  சாம்ராஜ்நகர் தாலுகா கெப்பேபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மஞ்சு. மஞ்சுவிற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு இருந்தார். தக்காளி நன்றாக விளைந்து இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக இருந்தது. தற்போது தக்காளி விலை உச்சத்தில் இருப்பதால் சந்தையில் தக்காளி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணத்தில் மஞ்சு இருந்தார். 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளி மூலம் அவருக்கு  20 லட்சம் ரூபாய் வரை கிடைத்திருக்கும்.


Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் மஞ்சுவின் விளை நிலத்தில் நுழைந்து தக்காளி செடிகாளை நாசமாக்கியுள்ளனர். நேற்றைய தினம் வழக்கம்போல் மஞ்சு தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தக்காளி பயிர்கள் சின்னாபின்னமாகி கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். மர்மநபர்கள் பயிர்களை நாசமாக்கியதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் புறநகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டு நிலவரம்: 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு மொத்த வியாபர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில்லறை வியாபார கடைகளில் 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு தக்காளி வரத்து குறைவாக இருக்கும் என்பதால் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget