மேலும் அறிய

சிவாஜிக்கு அடுத்து மோடிதான்: என்னதான் சொல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பின்னர் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை முழு மூச்சாக செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பின்னர் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை முழு மூச்சாக செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

முகலாயர்கள் மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் ஆட்சியின் போது அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டியது சத்ரபதி சிவாஜி மகாராஜ் எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  மராட்டிய போர் மன்னருக்குப் பிறகு தொடர்ந்து கோயில் மறுசீரமைப்பு பணிகள் பிரதமர் நரேந்திர மோடியால்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையானது சமூகத்தில் அட்டூழியங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாகவும், அவரால் தொடங்கப்பட்ட ‘சுயராஜ்யம்’ (Swaraj)க்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு புனேவில் உள்ள நர்ஹே-அம்பேகானில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தீம் பூங்காவான 'சிவ்ஸ்ருஷ்டி'யின் முதல் கட்டத்தை திறந்து வைத்து அமித் ஷா பேசினார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

21 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து உருவாகியிருக்கும் இந்தத் திட்டம், பத்ம விபூஷன் விருது பெற்ற ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே சத்ரபதி சிவாஜிக்கு அரசு சாரா அமைப்பு ஒன்று சிலை வைக்க உள்ளது. அந்த அமைப்பின் பெயர் அம்ஹி புனேகர்.

நோக்கம் என்ன?

எதிரிகளை எதிர்த்துப் போரிடும் ராணுவ வீரர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியம் மற்றும் தார்மீக விழுமியங்களால் உந்தப்பட்டு, அவரது சிலையை தினமும் பார்த்து, அவரின் வீரத்தை நினைத்துப் போரிடும் வலிமையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காகவே அம்ஹி புனேகர் அமைப்பு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கிரண் , தங்தார் திட்வால் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலை வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அனுமதி பெற்ற பிறகு சிலை:

காஷ்மீரில் குப்வாரா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சாகர் தத்தாத்ரேயாவிடம் அனுமதி பெற்ற பிறகு, சிலை நிறுவப்படும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் அடகேபர் ஸ்மாரக் சமிதி தலைவர் அபய்ராஜ் ஷிரோல், அம்ஹி புனேகர் தலைவர் ஹேமந்த் ஜாதவ் ஆகியோர் இந்த முயற்சியை திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹேமந்த் ஜாதவ் கூறுகையில், "சிலை நிறுவும் பணிக்கான பூமி பூஜை மார்ச் இறுதிக்குள் நடைபெறும். சிவாஜியின் வருகையால் புனிதம் அடைந்த ராய்காட், தோரணா, சிவனேரி, ராஜ்காட், பிரதாப்காட் கோட்டைகளிலிருந்து மண்ணும் நீரும் காஷ்மீருக்கு எடுத்து செல்லப்பட்டு அதை வைத்து பூமி பூஜை மேற்கொள்ளப்படும்" என்றார்.

உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்த சிவாஜி மகாராஜ்

இது தொடர்பாக அபய்ராஜ் ஷிரோல் கூறுகையில், "சத்ரபதி சிவாஜி மகாராஜ், தனது உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்தார். அவரது கொரில்லா போர் நுட்பங்களை உலகின் பல்வேறு நாடுகள் பின்பற்றுகின்றன.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிறுவப்பட்டு, எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு அவரின் கொள்கைகள் உத்வேகம் அளிக்கும். 

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget